முக்கியசெய்திகள்

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

இந்தியர்கள் யாரும் ஈராக் செல்ல வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல் இராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு வசித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈராக்கில் பாதுகாப்பாற்ற சூழ்நிலை நிலவுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அந்நாட்டுக்குச் …

மேலும் படிக்க

வில்லங்கச் சான்றிதழ் கட்டணமின்றி ஆன்லைனில் பார்க்கும் வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

வில்லங்கச் சான்றிதழ் கட்டணமின்றி ஆன்லைனில் பார்க்கும் வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் பதிவுத் துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் கட்டணமின்றி அத்துறையின் இணையதளத்தில் பார்க்கும் வசதியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பதிவுத் துறை மூலம் ரூ.9.2 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது: பல …

மேலும் படிக்க

பி.இ கலந்தாய்வு: தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டார். www.annauniv.edu/tnea2014 என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை காணலாம்.

மேலும் படிக்க

ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திரமோடி

இந்திய கடற்படையின் மிகப் பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவை, பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். கோவா கடல் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் போர்க்கப்பலில் வந்திறங்கினார். அவருக்கு, கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, விக்ரமாதித்யா போர்க் கப்பல் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் விவரித்தனர். மிக் 29 போர் விமானத்தில் அமர்ந்த பிரதமர் மோடி, இந்தியக் கடற்படையினரின் வலிமையை …

மேலும் படிக்க

உலக ரத்ததான தினம்: இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

உலக ரத்ததான தினம் உலக ரத்ததான தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “உலக ரத்ததான தினமான இன்று ரத்ததானம் செய்யும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ரத்ததானம் செய்வது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவை. ரத்ததானத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று நாம் மீண்டும் உறுதிமொழி ஏற்போம். எனது …

மேலும் படிக்க

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் ரேங்க் பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று வெளியிட்டார். தரவரிசைப் பட்டியலை www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு 27907 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசைப் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். முதலிடம் சுந்தரமகேஷ் தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த 132 பேரில், மாணவர் சுந்தரமகேஷ் முதலிடம் …

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு இல்லை – மத்திய அமைச்சர்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தெரிவித்தார். தற்போதைய விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று கூறியுள்ள அவர், மக்களுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய சிலிண்டர்களின் எண்ணிக்கையும் 12-ஆக அதே நிலையில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல்விலை குறித்து மத்திய அரசு தான் …

மேலும் படிக்க

பார்வையற்ற தமிழக மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை

சென்னை ஐ.ஏ.எஸ். தேர்வில் பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் தேசிய அளவில் சாதனை படைத்தார். மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யூபிஎஸ்சி) 2013-ம் ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த 109 பேரில், பினோ ஜெபின் என்ற பார்வையற்ற …

மேலும் படிக்க

நாளை டிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வு – காலியாக உள்ள இடங்கள் 2,342

திருச்சி: தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 விஏஓ பணியிடங்களை நிரப்ப நாளை டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நாளை தேர்வு நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில்  வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுவோர் …

மேலும் படிக்க

குஜராத்திலும் விரைவில் மலிவு விலை உணவகங்கள்!

அம்மா உணவகங்கள் போல் குஜராத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஏழை எளியோர்கள் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வெளியூர்களில் இருந்து வந்து செல்வோர் குறைந்த செலவில் உணவருந்தி செல்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை தொடங்கினார். இங்கு மலிவு விலையில் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் உணவு கிடைக்கிறது. அம்மா உணவகங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், உணவுகள் தரமான முறையில் …

மேலும் படிக்க