PPFA வேலூர் மாவட்டம் உதயமானது. சென்னை தலைமையகத்தில் விழா…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்டம் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் PPFA நிர்வாக அலுவலக வளாகத்தில் 10.02.2021 புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் அம் மாவட்ட நிர்வாகிகள், திருவள்ளூர் மாவட்டத்தின் தலைவரும், வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளருமான திரு.S. இதயாதுல்லா அவர்களின் தலைமையில் வருகை தந்தனர்.

அன்பிற்குரிய சகோதரர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் ( மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், மாநில செய்தி தொடர்பாளர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம்), பாசத்துக்குரிய சகோதரர் ” செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள் ( மாநில பொதுச் செயலாளர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் , ஜீனியஸ் டீவி ), ” கிங்மேக்கர்” திரு. Ln B.செல்வம்( போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளர், சிறப்பாசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி) ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்வின் தொடக்கமாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கான அடையாள அட்டையினை மாநில தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் ஆகியோரது திருக்கரங்களால் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட நிர்வாகத்தில் திரு. S. ராஜ்குமார் மாவட்ட தலைவர், திரு. M. பால்மோகன் செயலாளர், துணை தலைவர்களாக திரு. S. சக்ரபாணி, திரு B. தாஜுபாய் , இணை செயலாளராக திரு. M.H. யாசர் அல்தாப், துணை செயலாளர்களாக திரு.B. மார்க்கபந்து, திரு. A. சாமுவேல் புருஷோத்தம்மன் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக திரு E.இக்பால் ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் அவர்கள் நம் சங்கத்தின் விதிமுறைகள், நமது செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாநில பொதுச் செயலாளர் அவர்களும் சங்கத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்கிக் கூறி அவற்றை செயலாக்கத்தின் விதத்தினை எடுத்துரைத்தார். அதன்படி வேலூர் மாவட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு நிர்வாகிகள் உறுதி மொழி ஏற்றனர்.

இந் நிகழ்வில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான “ஜீனியஸ்” K. சங்கர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. P.K. மோகனசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.A.செய்யது சுலைமான், திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு ஜமீல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K.சங்கர்
ஒளிப்பதிவு: திரு.A. செய்யது சுலைமான்
என்றும் மக்கள் நலப்பணியில்..
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு.

Check Also

பிபிஎஃப்ஏ (PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் “தண்ணீர் பந்தல் திறப்பு” மாவட்டத்தின் தலைவர் திரு. ச.பாக்கியராஜ் …