PPFA திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா!…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன்(PPFA) திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 31.10.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட கலந்தாய்வு கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் அறிமுகம், மாவட்ட உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம் என நடந்த முப்பெரும் விழாவிற்கு மாவட்ட தலைவர் திரு. S. பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திரு. M. தினகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளருமான “நட்பின் மகுடம்” .MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று, மாவட்ட பெயர் பலகையினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” திரு. Ln C. பாலகிருஷ்ணன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. B லட்சுமி நாராயணன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. P.K.மோகனசுந்தரம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி விளம்பர மேலாளருமான திரு. D. மகேந்திரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. S. இதயாதுல்லா, மாவட்ட செயலாளர் திரு A. செய்யது சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. ஜமீல் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்டத்தின் சார்பில் பொது மக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது, ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பாக கோவிட்19 தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.

முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் கூட்டம் நடைபெற்ற அரங்கினுள் நுழையும் போது திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பூங்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பினை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் பிறகு கோவிட்19 நோய் தொற்றின் போது மக்களுக்காக களப்பணியாற்றி உயிர் நீத்த சுகாதாரத்துறை, காவல்துறை, செவிலியர்கள் அனைவருக்கும் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணை புரிந்த போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.‌ M.தினகரன், மாவட்ட துணை தலைவர் திரு. B. மோசஸ் கார்த்திக், மாவட்ட இணை செயலாளர் திரு. S. ஜெயக்குமார், மாவட்ட துணை செயலாளர் திரு.‌K. குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பு செயலாளர் திரு. K .ராஜு, அம்பத்தூர் தொகுதி தலைவர் திரு. E. லட்சுமிகாந்தன் ஆகியோரது பங்களிப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியினை மாவட்ட துணை தலைவர் பா. மோசஸ் கார்த்தி அவர்கள் தொகுத்து வழங்கினார். போலிஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி, நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மாநில தலைவரது திருக்கரங்களால் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும். கூட்டத்தின் முடிவில் மாவட்ட செயலாளர் திரு. M. தினகரன் நன்றியுரை கூறினார்.

ஒளிப்பதிவு: திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
செய்தியாக்கம் : S. பாக்கியராஜ்

Check Also

அன்னை சபிதா உதவும் கரங்கள் சார்பாக அன்னதானம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சென்னை மாவட்ட செயலாளரும், அன்னை சபிதா உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனருமான திரு.S. அன்பு …