Tag Archives: அரசியல்

செயலிழந்த தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவியாக இருந்த தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளம் (http://elections.tn.gov.in/)நேற்று முதல்செயலிழந்தது. இதுபற்றி கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன் குமார், இது ஹார்ட்வேரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறுதான். அந்த தளத்தில் இருந்த தகவல்களை வேறொரு தளத்தில் பாதுகாத்து வைத்துள்ளோம். இதனால், எவ்வித தகவல் இழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார். இன்று இணையதளம் …

மேலும் படிக்க

தமிழகத்தில் மக்களவைக்கு சரியாக 73.67%, ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% வாக்குப்பதிவு:தேர்தல் கமிஷன்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 73.67 சதவீதம் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% ஓட்டு பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான ஓட்டுக்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. எண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு % 1  திருவள்ளூர் (தனி) …

மேலும் படிக்க

மும்பையில் மட்டும் 15 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்

மும்பையில் மட்டும் 15 லட்சம் வாக்காளர்கள்  பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் வாக்காளர்கள் மத்தியில் கடும்  கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாநிலம் முழுவதும் 60 லட்சம் பேரின்  பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் அதோடு அனைத்து தொகுதியிலும்  மறுதேர்தல் நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த  மக்களவை தேர்தலில் அதிகப்படியான வாக்காளர்களின் பெயர்கள்  விடுபட்டு போய் இருந்தது. அதாவது மும்பையில் உள்ள மொத்த  வாக்காளர்களில் 15 …

மேலும் படிக்க

தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன:வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967க்குப் பிறகு 46 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும். 2009 தேர்தலில் 72.98 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. தற்போது 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. …

மேலும் படிக்க

ராஜீவ் காந்தி கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை மாநில அரசு  விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் ரஞ்சன் …

மேலும் படிக்க

தமிழகத்தில் வாக்குப்பதிவு 70% – பிற்பகல் 5 மணி நிலவரம்

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி, தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 79.32% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 56.84% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆலந்தூர் இடைத் தேர்தல் 62% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு: தொகுதி காலை 9 மணி காலை 11 மணி மதியம் 1 …

மேலும் படிக்க

வாக்களிப்பதற்கு வசதியாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வாக்களிப்பதற்காக வெளியூர்களுக்கு செல்ல விரும்புவோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அலுவல் நிமித்தமாக சென்னையில் தங்கியிருக்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்கள் இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளன. …

மேலும் படிக்க

144 தடை உத்தரவை பயன்படுத்தி ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் …

மேலும் படிக்க

தமிழகத்தின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல, டாடி தான் காரணம்: ஸ்டாலின்

[pullquote]தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல என் டாடிதான் காரணம் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.[/pullquote] புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, ஜெயலலிதா நேற்று பிரச்சாரத்தின் போது தமிழக வளர்ச்சிக்கு காரணம் இந்த லேடி தான் என்று கூறியிருந்தார். ஜெயலலிதாவின் நேற்றைய கருத்து குறித்து விமர்சித்த ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எனது டாடி தான் காரணம் என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் தாம் கண்டது திமுகவிற்கு …

மேலும் படிக்க

நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : ஜெயலலிதா

அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – நாட்டின் சிறந்த நிர்வாகி குஜராத்தின் மோடி அல்ல, தமிழ்நாட்டின் இந்த லேடிதான் : தென்சென்னை மக்களவைத் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா. தென்சென்னை மக்களவைத் தொகுதியில் நேற்று, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கடந்த ஒன்றரை மாதகால, தமது சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில், மாற்றுக்கருத்து கொண்டவர்களை கீழ்த்தரமாக விமர்சிக்கவில்லை என்றும், மத்திய காங்கிரஸ் கூட்டணி …

மேலும் படிக்க