திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் பகுதியில், மணிகண்டபுரம் சீனிவாசன் நகர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஒரு வார காலமாக மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. பல வருடங்களாக பராமரிப்பு இல்லாத நிலையில், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீரும் இதில் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று அபாயத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடியிருப்பு நலசங்கங்கள் …
மேலும் படிக்கமாடுகள் அடாவடி .. தடாலடியா நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி…?
சென்னை ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சி.டி.எச். சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்தப் பகுதியில் மருத்துவமனை, திருமண மண்டபம், குடிமகனின் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் இருப்பதால் பொதுமக்கள் அதிமாக வந்து செல்லும் இடமாக இருக்கிறது. மக்கள் அதிகம் கூடும் அம்பேத்கர் சிலையருகில் காலை, மாலை, இரவு என்று பாராமல் மாடுகள் உலாவருவதும், சாலை ஓரங்களில் அமர்ந்திருப்பதும் பல நேரங்களில் வாகன ஓட்டிகளை நிலை தடுமாறவும் செய்து …
மேலும் படிக்கபிரதமர் மோடி உருவபொம்மை எரிப்பு. சென்னையில் பரபரப்பு…
சென்னை, ஆவடியில் இராணுவத்திற்கு சொந்தமான பாதுகாப்புத்துறை தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை நம்பி 41 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தொழிற்சாலையினை மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்து, அதற்கான ஒப்பந்தம் 16.06.2021 அன்று நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த தொழிலாளர்கள் கார்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக சென்னை ஆவடி தொழிற்சாலை வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி