வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்புபவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து குமரி எல்லையான களியக்காவிளை வழியாக தமிழ்நாடு நுழைகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் எல்லையில் சோதனைகள் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் தனியாக விடுதியில் தங்க வைக்கப்பட்டு 7 நாட்கள் கண்காணிப்பிற்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மற்ற மாவட்டத்தை சார்ந்தவர்கள் பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் …
மேலும் படிக்க