சென்னை விம்கோ நகர்- வண்ணாராப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இன்று பாரத பிரதமரால் துவக்கப்பட்டுள்ளது. இத் தடத்தில் 9 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது.இன்று மட்டும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச பயணத்திற்கு மக்களை அனுமதியளித்தனர். இதனால் மக்கள் வெள்ளத்தில் மெட்ரோ ரெயில்களில் அலைமோத, நம் பங்கிற்கு நாமும் இதில் பயணிக்க புதிய அனுபவத்தினை பெற்றது நிஜம். இருப்பினும் தேர்தல் வர இருப்பதாலும் இத் …
மேலும் படிக்கசென்னையில் பாரத பிரதமர்…
சென்னை நேரு விளையாட்டு அரங்கிற்கு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி வருகை தந்தார்.சென்னை விம்கோநகர்- வண்ணாராப்பேட்டை மெட்ரோ ரயில் தடத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கடற்கரை- அத்திபட்டு வரையிலான ரயில் வழித்தடத்தினையும் தொடங்கி வைத்தார். விழுப்புரம்- தஞ்சாவூர்- திருவாரூர் வரை மின்மயம்மாக்கப்பட்ட ஒரு வழிப் பாதை தொடக்க விழாவினையும், கல்லனை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார். …
மேலும் படிக்கஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்பு
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறைஅமைச்சராக இருந்த மால்கம் டர்ன்புல் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின் போது கவர்னர்-ஜெனரல் பீட்டர் காஸ்க்ரொவ் மால்கம் டர்ன்புல்லுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்ட பின் பேசிய டர்ன்புல் வலிமையான நாட்டை உருவாக்க கூட்டாக சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்.
மேலும் படிக்கஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …
மேலும் படிக்கசெய்தியாளர்களுக்கு பாராட்டு: பிரதமர் மோடி
தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறப்பான விழிப்புணர்வு கொடுத்துள்ளதாக செய்தியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தீபாவளிப் பண்டிகையை அடுத்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு தேநீர் விருந்தளித்தார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் பேசிய மோடி, பத்திரிக்கையாளர்களுடன் உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஊடகங்களில் இருந்தும் தாம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் …
மேலும் படிக்கபிரதமர் மோடியை வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா
பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, முதல் முறையாக கடந்த 25ம் தேதி அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ‘கெம் சோ’ எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருவரும் …
மேலும் படிக்கஅமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, ஜெர்மனியின் ஃப்ராங்பர்ட் நகரில் இரவு தங்கினார். பின்னர், வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருந்து தனது தனி விமானத்தில் புறப்பட்ட அவர், சுமார் 9 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப் …
மேலும் படிக்கஅமெரிக்கா புறப்பட்டார் மோடி
ஐந்து நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி. நியூயார்க் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டில்லியில் இருந்து புறப்பட்டார். அமெரிக்காவில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, நியூயார்க் நகரில் ஐநாசபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். மேலும் அந்நாட்டு அதிபர் ஒபாமா, உள்பட பல்வேறு தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அமெரிக்காவிற்கு மோடி முதன் …
மேலும் படிக்க“மேக் இன் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். ‘மேக் இன் இந்தியா’ பிரச்சாரத்தின் துவக்க விழாவில், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை துவக்கி வைத்த வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க உரிமங்கள் வழங்குவதை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அரசு …
மேலும் படிக்கஎனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் – பிரதமர் மோடி
தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், நல விரும்பிகளையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் உள்பட நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி, அவரது 64ஆவது பிறந்த நாளைக் கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ள நிலையில், மோடி இவ்வாறு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து மோடி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எனது பிறந்த நாளுக்காக …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி