Tag Archives: விபத்து

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் மூதாட்டி உள்பட 5 பேர் பலி….

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், பத்மநாபன் வீட்டில் இன்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த வயதான பெண்மணி …

மேலும் படிக்க

சென்னை, இராயபுரம் லெதர் கம்பெனியில் பயங்கர தீ..

சென்னை இராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெருவில் தனியார் லெதர் கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியில் இன்று மதியம் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இங்கு பலதரப்பட்ட தோலினால் செய்யப்படும் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், அவை அனைத்தும் தீயில் சேதம் அடைந்ததாகவும் தெரிகிறது. விபத்தின் மதிப்பு இன்னும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரமாக எரியும் தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக …

மேலும் படிக்க

கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இந்த சந்திப்பில் மேல் நோக்கி செல்லும் சிக்னல் கம்பி மீது உரசியதில் அதனையொட்டி இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராத விதமாக அறுந்து, அதனருகே நின்ற 40 வயதுடைய வாலிபர் மேல் விழுந்ததில் அவருடைய கால் முறிந்ததது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போக்குவரத்து போலீஸார் …

மேலும் படிக்க

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த …

மேலும் படிக்க

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து: 40 பேர் படுகாயம்

கடலூர் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஏறக்குறைய 40 பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “திருச்சி ரயில்வே சரகத்துக்கு உட்பட்ட பூவனூர் எனும் இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை எழும்பூர் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 16859 வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் எதிர்பாராத விதமாக தடம் …

மேலும் படிக்க

இமாச்சலில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி, 15 க்கும் மேற்பட்டோர் காயம்

இமாச்சல பிரதேசத்தில், 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்ற போது திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. சட்லெஜ் …

மேலும் படிக்க

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 200 பேர் காயம்

சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர். சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். …

மேலும் படிக்க

ஒகேனக்கல்லில் பரிசல் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த 6 பேர் பலி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்து சென்னையைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகர், தெற்கு உஸ்மான் சாலை பகுதியில் வசிப்பவர் ராஜேஷ் (30). இவர் சென்னையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று திருமண நாள் என்பதால் குடும்பத்தாருடன் காரில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா …

மேலும் படிக்க

சீனாவில் இரசாயன ஆலையில் வெடிப்பு

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷாண்டொங் மாகாணத்தில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு ஒன்று நடந்ததாக சீன ஊடகங்கள் கூறியுள்ளன. ஷிபோ நகருக்கு அருகே அந்த இடத்தில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன. 5 கிலோமீட்டர்கள் தூரம் வரை அந்த வெடிப்பு உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. வெடிப்பை அடுத்து உருவான தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடுகின்றனர். பாதிப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

மேலும் படிக்க

நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி

சுலோவாக்கியா நாட்டில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சுலோவாக்கிய நாட்டு விமானம் மேற்கு மாகாணத்தில் 40 பாராசூட் வீரர்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது செக்குடியரசு நாட்டின் எல்லையில் கெமன் என்ற பகுதியில் நடுவானில் 1500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக L-410 டிவின் இன்ஜின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த …

மேலும் படிக்க