ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: முத்கல் குழு விசாரணைக்கு பிசிசிஐ எதிர்ப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

ஐ.பி.எல் சூதாட்டப் புகாரை எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி முத்கல் குழு, ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து, ஐபிஎல் போட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக விசாரிக்க புதிய குழு அமைப்பது தொடர்பான விசாரணை முடிந்து, தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Check Also

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது

1993-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இந்திய அணி. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *