சேலம் மாவட்டத்தில் உதயமானது, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஸோஸியேஷனின் கிளை

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தனது 16 ஆம் ஆண்டை நோக்கி தனது அமைதியான செயல்பாட்டில் இயங்கி வருகின்ற நிலையில் மாங்கனி நகரம் என அழைக்கப்படுகின்ற ” சேலம் மாவட்டம்” தனது புதிய அத்தியாத்தினை தொடங்கவிருக்கின்றது.

அவ் வகையில், சேலம் மாவட்டத்தின் செயலாளராகவும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளராகவும் பொறுப்பேற்கும் திரு. P. லட்சுமணன் அவர்களுக்கு, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ‘” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது திருக்கரங்களால் சங்கம், மாத இதழ் அடையாள அட்டை மற்றும் பேட்ஜ் வழங்கி சிறப்பித்தார்.

தொடர்ந்து நமது சென்னை மாவட்டத்தை சேர்ந்த திரு. C. சுதிர் குமார் அவர்களுக்கு, சங்கம், மாத இதழ் அடையாள அட்டை மற்றும் பேட்ஜ் வழங்கி சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் சிறப்பு அம்சமாக இமாசல பிரதேசத்தின் பாரம்பரிய தொப்பியினையும், அழகிய பொன்னாடையும் ” நம்ம ஆளுமை” க்கு அணிவித்து சிறப்பித்தது கூடுதல் மகிழ்ச்சியான நிகழ்வாகும்.

இந் நிகழ்வில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும்,ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம், திரு. N.A. அரவிந்த் ( சேலம் மாவட்டம்) ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

” சேலம் எனக்கு பிடித்தமான நகரம். அந் நகரில் நமது கிளை துவக்க கடந்த நான்கு வருடங்களாக காத்திருந்தேன். அதுவும் நல்லதுக்கு தான் என்பது உங்களது பொறுப்பு உணர்த்தியுள்ளது. ஆக நமது சங்கத்தின் செயல்பாடுகளை சிறப்பாகவும், அதே வேளையில் இதற்கான ஆலோசனைகளை எந்நேரமும் நேரடியாக என்னை தொடர்பு கொண்டு பணியாற்றலாம் ” என “நம்ம ஆளுமை” அவர்கள் புதிய நிர்வாகிக்கு அறிவுறுத்தினார்

Check Also

வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் தலைவருடன் ஒரு சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் …