மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் 5 காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணயம் இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் எப்படி காவல் துறை அதிகாரிகளை மாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நான் யாரையும் இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது, இதனால் சட்டம் ஒழுங்கு கெட வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணி வரை கெடு விதித்துள்ள தேர்தல் ஆணையம், தேவைப்பட்டால், மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவை ரத்து செய்யவும் தயங்கமாட்டோம் என தெரிவித்துள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி