சென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….

சென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர்.

சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ்டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், முககவசம் வழங்கினர்.

இந்நிகழ்வில் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திருவொற்றியூர் மண்டல் நிர்வாகிகள் மற்றும் அன்ன செல்வி, ஈஸ்வரி தீனா, கலைமதி, ஷோபனா, அன்னம்மாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Check Also

டாஸ்மாக்கை மூடக்கோரி பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்…

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில், மதுபான கடைகள் திறக்க அரசு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, பாரதிய ‌ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் …