அரசியல்

கருப்புப் பண பட்டியலில் சோனியா, ராகுல் பெயர்கள்: சுப்ரமணியசாமி குற்றச்சாட்டு

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் உள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சோனியா, ராகுல் இருவரும் கருப்புப் பணத்தை பதுக்கியிருப்பது குறித்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.  கருப்புபண மீட்புக் குழுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சோனியா, …

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி கருணாநிதி சார்பில் ஆட்சியரிடம் ஸ்டாலின் மனு

திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கருணாநிதி சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மனு அளித்தார். திருவாரூரில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி சாராதவர்களுடனான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது, மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றார். அங்கு, ஆட்சியரிடம் கருணாநிதி சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளிக்கிறேன் என்று கூறி மனு …

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் சிவசேனா பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது: வரும் 31-ல் புதிய அரசு பதவியேற்பு

மகாராஷ்டிர முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யார் என வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா வரும் 31-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முன்வந்துள்ளது. இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் முதல்வராவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கப் போதுமான பெரும்பான்மை இல்லை. இதைத் தொடர்ந்து நீண்ட கால …

மேலும் படிக்க

2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாளு அம்மாளின் மனு தள்ளுபடி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சார்பில் அவரது மகள் செல்வி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அமரேந்திர சரண் …

மேலும் படிக்க

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற விரும்புகிறது கர்நாடக அரசு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக சிறையில் வைத்திருப்பதில் பெரும் குடைச்சலில் இருக்கிறது கர்நாடக அரசு. பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடகம் விரும்புகிறது. செப்.27ல் ரூ.66.65 கோடி வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக பெங்களூர் சென்ற ஜெயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அங்கேயே சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் அடைக்கப்பட்ட மத்திய சிறைச்சாலை வளாகத்திலும், சிறைச்சாலையைச் சுற்றிலும் அதிமுக தொண்டர்கள் …

மேலும் படிக்க

ஆர் எஸ் எஸ் தலைவரின் உரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பட்டதால் சர்ச்சை

இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என்றழைக்கப்படும் ‘ராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் இன்று நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆற்றிய உரை இந்திய அரச தொலைக் காட்சி நிறுவனமான தூர்தர்ஷனால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா இந்துக்களின் நாடு என்ற கோட்பாட்டை முன் நிறுத்தும் அமைப்பு ஆர் எஸ் எஸ். நாட்டையாளும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் …

மேலும் படிக்க

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நவராத்திரி வாழ்த்து

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள நவராத்திரி வாழ்த்துச் செய்தியில், வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாயும், செல்வத்தைத் தரும் திருமகளாயும், துணிவைத் தரும் மலைமகளாயும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை ஒன்பது நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள். ஒன்பது நாட்கள் அன்னை சக்தியை வழிபடுவதால் ‘நவராத்திரி’ …

மேலும் படிக்க

அடுத்தது “அம்மா ஜெயிலா” டிவிட்டரில் சுப்ரமணிய சுவாமி

டிவிட்டரில், தமிழக அரசின் அம்மா பெயரில் உள்ள  திட்டங்களை கிண்டலடித்துள்ளார் சுப்ரமணிய சுவாமி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், அம்மா கேன்டீன், அம்மா சிமென்ட், அடுத்து அம்மா ஜெயிலா? என்று கேட்டுள்ளார். After Amma Canteen Amma Cement will there be Amma Jail? — Subramanian Swamy (@Swamy39) September 29, 2014

மேலும் படிக்க

ஜெயலலிதா மீதான தண்டனை ரத்து, ஜாமீன் வழக்கு விசாரணை அக்.7-க்கு ஒத்திவைப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம்

தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு அக்டோபர் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் புதிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜெயலலிதா உடனடியாக ஜாமீனில் விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை …

மேலும் படிக்க

ஜெயலலிதா வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை

ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது. ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை உத்தரவிட்ட நிலையில், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை அளித்தனர். கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அளிக்கப்பட்ட அந்த …

மேலும் படிக்க