முக்கியசெய்திகள்

இலங்கையில் தரையிறங்கினார்களா சூப்பர் சிங்கர் பாடகர்கள்?

சூப்பர் சிங்கர்கள் இன்று அதிகாலை இலங்கையில் தரையிறங்கினார்கள் என இலங்கை இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் திவாகரின் நிலை இன்னமும் தெரியவில்லை ஆனால் அவரும் அங்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வருகிறது, அது உறுதிப்படுத்தப்படவில்லை. தமிழர்களை படுகொலை செய்த தேசத்தில் இவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கு பெறும் சூப்பர் சிங்கருக்கு இலங்கையில் நடப்பது பற்றி கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு முழுமையான விபரம் வழங்கப்படமாலே இலங்கை அழைத்துச் சென்றனர் என்பதுடன் …

மேலும் படிக்க

மோடியை ஆண்மையற்றவர்: ராகுல் பேச்சை மீறி குர்ஷித் பிடிவாதம்

டெல்லி: இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக அறிவித்துள்ளார் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘2002’ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் …

மேலும் படிக்க

நாட்டின் முதல் எலக்ட்ரிக் பஸ் பெங்களூரில் அறிமுகம்

பெங்களூரு: பெங்களூர் நகரில் இந்தியாவிலேயே முதல் எலக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸை பெங்களூரு மாநகர பேருந்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.     ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை ஓடும். இந்த பஸ்ஸின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரம் ஆகும். தற்போதைய நிலையில் இந்த பஸ்ஸை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியில் மட்டுமே உள்ளது. இந்த பஸ்ஸின் …

மேலும் படிக்க

இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் இன்று நடைபெற இருந்த தமிழகத்தின் ‘சூப்பர் சிங்கர்’ இசை நிகழ்ச்சி இப்போது இரத்து செய்யப்பட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது . இந்த நிகழ்ச்சியை கொழும்பில் ஏற்பாடு செய்த ‘கோரல் ப்ரோபெர்ட்டி’ என்ற நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டது . கீழ்கண்டவாறு அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. “இன்று மாலை 6.30 மணிக்கு மருதானை, சென்.ஜோசப் கல்லூரியிலும், நாளை மாலை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்திலும் எமது …

மேலும் படிக்க

ராகுலை முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை- கணவரே எரித்தார்!

குவஹாத்தி: அஸ்ஸாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண் அவரது கணவரால் தீவைத்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுலுக்கு முத்தமிட்டது தொடர்பாக அந்தப் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டுள்ளது. அதில் தனது மனைவி மீது தீவைத்து விட்டார் கணவர். அவரும் தீவைத்துக் கொண்டார். இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்ஸாமின் …

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் உதயகுமார்

இடிந்தகரை – 28-02-2014 கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் ‘அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக் குழு’ ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், ஆம் ஆத்மி   கட்சியில்  இணைந்தார். இடிந்தகரையில் சுப.உதயகுமார், போராட்டக்குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான மை.பா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் ஆம் ஆத்மி உறுப்பினர் படிவங்களை நிரப்பி, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் டேவிட் வருண்குமார் தாமஸிடம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், “ஆம் …

மேலும் படிக்க

உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- ஐ.டி. இளைஞனின் கடிதம்

‘யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?’ ‘காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்… அப்படி என்ன வேலையோ?! ‘ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!’ ‘இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?’ உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை. ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் …

மேலும் படிக்க

தேர்தல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் நியூஸ் சேனல்கள் மற்றும் மக்களை ஏமாற்றிய நிறுவனங்கள்

டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் இந்தி டிவி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் எதிரொலியாக தற்போது டைம்ஸ் நவ் டிவியும் தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. நியூஸ் எக்ஸ்பிரஸ் டிவி கருத்துக் கணிப்புகளை எந்த அளவுக்கு போலியானதாக, மோசடியாக செய்கிறார்கள் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. அது ஸ்டிங் ஆபரேஷன் நடத்திய கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் ஒன்று சி வோட்டர். இதையடுத்து சிவோட்டர் மூலம் கருத்துக் …

மேலும் படிக்க

நண்பர்கள் நகர நல அமைப்பின் சேவைகளின் ஒரு துளி

சிறையில் வாடும் சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்காக திருவள்ளுர் மாவட்டம், உட்கோட்டை கிராமத்தில் நடத்தப்படும் மகாத்மா காந்தி உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாள் விழா, சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையிலுள்ள நண்பர்கள் நகர நல அமைப்பின் சார்பாக 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை காலை 9.30 மணியளவில் அமைப்பின் பொருளாளர்       பி. வெங்கடேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து …

மேலும் படிக்க

நிதி நிறுவனங்களை பற்றி தெரிந்துகொள்ள புதிய வசதி – பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலீப் அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– பொது மக்கள் ஏராளமான மோசடி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறையில் பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி தடுப்பு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் பொது மக்கள் போன் செய்து நிதி நிறுவனங்கள் பற்றிய …

மேலும் படிக்க