முக்கியசெய்திகள்

​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சுயேட்சை உறுப்பினர் ரஷீத் என்பவர், நேற்று மாலை தனது நண்பர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. ரஷீத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக தேசிய மாநாட்டு …

மேலும் படிக்க

லாரி வேலைநிறுத்தம் வாபஸ்:பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சுங்கச்சாவடிகள் மற்றும சுங்கக் கட்டணங்களை முறைப்படுத்துவது …

மேலும் படிக்க

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த …

மேலும் படிக்க

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் படுகொலை

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மர்ம‌ நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை.  சென்னை, மன்னூர்பேட்டை, லொகையா நாயுடு தெரு, நம்பர். 15 ல் வசிப்பவர் எம். குரு. அதிமுக வை சேர்ந்த இவர் அந்தப்பகுதியின் (86 வது வார்டு) கவுன்சிலராகவும் உள்ளார். இவர் இன்று மதியம் 1மணியளவில் தனது …

மேலும் படிக்க

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 220 பேர் பலியானதாகவும், 450 பேர் …

மேலும் படிக்க

சூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சரத்குமார் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேலும் கூறியதாவது:- சூரிய ஒளி மின்சக்தியை நவீன முறையில் செயல்படுத்த …

மேலும் படிக்க

சென்னையில் நேற்றிரவு கன மழை

சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மேலும் படிக்க

அதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: ஸ்டாலின்

நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசாரத்தின் 2ம் நாள் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, “நமக்கு நாமே விடியல் மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழுவதும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று …

மேலும் படிக்க

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் தீவிர விசாரணை

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை மற்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெறபட்ட ஆவணங்களைக்கொண்டு சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி நாமக்கல்லில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா திருச்செங்கோடு டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பொறியாளர் கோகுல்ராஜ் …

மேலும் படிக்க

ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

விண்ணில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்தவதற்காக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்ணில் உள்ள கிரகங்கள் பற்றி, ஆஸ்ட்ரோ சாட் செயற்கை கோள் ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோளுடன், இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் 6 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வரும் 28ம் …

மேலும் படிக்க