செய்திகள்

நக்கீரன் மற்றும் ஜூனியர் விகடனின் தேர்தல் கருத்துக் கணிப்பு

ஜூனியர் விகடன் பத்திரிக்கையின் கருத்துக் கனிப்பு: அதிமுக -15,  திமுக அணி- 14, பா.ஜ.க. அணி 10  திமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகள் விடுதலை சிறுத்தைகள்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் சிதம்பரம் புதிய தமிழகம்வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் தென்காசி அதிமுக  வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகள் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், …

மேலும் படிக்க

பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடாதீர்கள்: பாஜக மூத்த தலைவர்களக்கு மோடி வேண்டுகோள்

பாரதீய ஜனதா தலைவர் கிரிராஜ் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா வெளியிட்ட கருத்துக்கள் பாரதீய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாரதீய ஜனதா நலம் விரும்பிகள் என்று கூறி தேவையில்லாத பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர்  நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதை …

மேலும் படிக்க

தேர்தலை பொதுமக்கள் நேரடியாக இணையதளம் மூலம் பார்க்க முதல் முறையாக ஏற்பாடு

வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் பார்க்க முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 39 மக்களவை, ஆலந்தூர் சட்டப்பேரவை   உள்ளிட்ட தொகுதிகளில் மொத்தம் 60,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 60,817 வாக்குச் சாவடிகளில் 17,684  சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் உள்ள குறிப்பிட்ட சாவடிகளை இணையதளம் மூலம் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாளான …

மேலும் படிக்க

தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு

தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்காமல் மக்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரவீண்குமார் பேசியதாவது, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்று(22-04-2014) மாலை 6 மணி முதல் 24-04-2014 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை …

மேலும் படிக்க

குஜராத்தில் பதற்றம்-முஸ்லீம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை காலி செய்ய விஹெஸ்பி தலைவர் தொகாடியா 48 மணி நேரம் கெடு:

குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் …

மேலும் படிக்க

தமிழக காங்கிரஸ் களமிறக்கிய நட்சத்திரம் நடிகை மும்தாஜ்!

தமிழக காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்காக தமது பிரசார பீரங்கியாக நடிகை மும்தாஜை களம் இறக்கியுள்ளது, அரக்கோணம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜேஷுக்கு ஆதரவாக ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் மும்தாஜ் கொஞ்சும் தமிழில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து மும்தாஜ் பேசுகையில், “நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர், தமிழக மக்களுக்கு உழைப்பதற்காக அங்கிருந்து பிளேன் பிடித்து வந்துள்ளார். அதனால்தான் ராகுல்காந்தி இவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளார்” என்றார். காங்கிரஸ் …

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணப்படும்: ராகுல் உறுதி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று ராமநாதபுரத்தில் அத்தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் மற்றும் சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் உள்பட காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:– 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வன்முறையும், மத துவேசமும் கிடையாது. இந்திய மக்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே சிறப்பான திட்டங்களை தந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர் …

மேலும் படிக்க

மும்பையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம்

மும்பையில் கட்டி முடிக்கப்பட்ட டபுள் டக்கர் மேம்பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. சான்டாக்ரூஸ் சேம்பர் லிங்க் ரோடு(SCLR) என்ற இந்த மேம்பாலம், பல மைல் தொலைவு பயணத்தைக் குறைத்திருப்பதாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மேம்பாலத்தில் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கவும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் போக்குவரத்துக் காவல்துறையினர் விதித்துள்ளனர். இதனை இந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்கின்றனர். …

மேலும் படிக்க

மீண்டும் விரட்டப்பட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தேனி தொகுதியில் பிரசாரத்திற்குப போன இடத்தில் சீலையம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்து கொண்டு கடந்த தேர்தலின்போது உறுதியளித்த பசுமை வீடு திட்டம் என்னவாயிற்று, எங்களுக்கு ஏன் வீடு கட்டித் தரவில்லை என்று கேட்டு எதிர்ப்பு குரல் கொடுக்கவே தேர்தல் பிரச்சாரத்தை தொடரமுடியாமல் சென்றுவிட்டார் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். இதுப்பற்றி அந்த பெண்கள் கூறும்போது, பசுமை வீட்டு கட்டித்தருவதாக கூறி ஏறக்குறைய ரூ.50 ஆயிரம் …

மேலும் படிக்க

டியுஜே சார்பாக டாக்டர் சிவந்தி ஆதித்தன் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்(டியுஜே) சார்பாக நான்காம் தூணின் நாயகர், பத்திரிகை உலகின் ஜாம்பவானாக விளங்கிய பத்ம ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு விழா மற்றும் படத்திறப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள, சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாநிலத் தலைவர் D.S.R. சுபாஷ் தலைமை தாங்க, நெற்றிக்கண் A.S.மணி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதியின் குரல் C.R.பாஸ்கர் பத்ம ஸ்ரீ டாக்டர் …

மேலும் படிக்க