போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான “நட்பின் மகுடம்” திருMJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, தென்சென்னை மாவட்டம் நிர்வாகிகள் திருவான்மியூர், பெசன்ட் நகர்,அடையார் பகுதிகளில் உள்ள சாலையோர மக்களுக்காக உணவை கடந்த 17 நாட்களாக, தினமும் 100 நபர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் 01.06.2021 செவ்வாய் கிழமை மதிய உணவினை திருவான்மியூர் காவல் நிலையம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களது கரங்களால் திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயில் அருகே வழங்கினார்கள்.