Tag Archives: உலகம்

கௌரவ மரணத்தால் புற்றுநோய் அரக்கனை கொன்ற பெண்

அமெரிக்காவில் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனது வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த பெண், நோயால் உயிரிழப்பதை தவிர்த்து, நோயைக் கொல்லும் விதத்தில் கௌரவமான மரணத்தைத் தழுவியுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரிட்டானி மேனார்ட் என்ற 29 வயது பெண் மூளை புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகள் உதவாத நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இன்னும் 6 மாத காலமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், …

மேலும் படிக்க

ஜெருசலேம் அல் அக்சா பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

மத்தியகிழக்கின் ஜெருசலேத்திலுள்ள அல்-அக்சா பள்ளிவாசல் வளாகத்தை, கொந்தளிப்பு நிலவியதை அடுத்து , வியாழனன்று மூடியிருந்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதனை மீண்டும் திறந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு முன்பாக கூடுதலான போலீஸ் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனர் ஒருவரை போலீஸார் சுட்டுக்கொன்றதற்கு தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கான தினம் என வெள்ளிக்கிழமையை அறிவித்துள்ள ஜெருசலேம் வாழ் பாலஸ்தீனர்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வலதுசாரி யூத ஆர்வலர் ஒருவர் மீது புதன்கிழமை நடந்த துப்பாக்கித் தாக்குதலை …

மேலும் படிக்க

மியான்மார்: அதிபர்- இராணுவம்- ஆங் சான் சூய் முக்கியப் பேச்சு

மியன்மாரின் முக்கிய இராணுவ பிரமுகர்களையும் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூய் உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் அழைத்து அதிபர் தெயின் செயின் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மாரின் மூத்த இராணுவ ஜெனரல் இந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா மியன்மாருக்கு விஜயம் மேற்கொள்வதற்கு சில வாரங்கள் உள்ள நிலையில், இந்த அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மியன்மாரில் அடுத்த ஆண்டுபொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக மியன்மாரின் சர்ச்சைக்குரிய …

மேலும் படிக்க

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை

தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக 2011-ல் வழக்கு தொடரப்பட்டது. கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர், இலங்கை மீனவர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீனவர்கள் 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் …

மேலும் படிக்க

இலங்கை மண்சரிவு விபத்தை அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் ஹல்து முல்லையில் மண்சரிவில் புதையுண்டுள்ள தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதி, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றத் தவறியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மலையகத் தோட்டங்களில் வீடமைப்புகளின் போது, பாதுகாப்பான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படாமையும் மண்சரிவு அபாயங்களில் உயிரிழப்புகள் ஏற்படக் காரணம் என்று இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் …

மேலும் படிக்க

ஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் மறு தேர்வு பெற்ற ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும். 193 நாடுகள் உள்ள ஐ.நா. சபையில் பொருளாதார, சமூக அமைப்புக்காக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 183 வாக்குகளை இந்தியா பெற்றது. இந்த அமைப்புக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் நாடுகளில் இதுவரை அதிகளவு வாக்குகள் பெற்ற நாடுகளில் …

மேலும் படிக்க

உயிரணுக்களின் இயக்கத்தை படம் பிடிக்கும் புதிய நுண்ணோக்கி

இந்த வருடம் இரசாயனவியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட விஞ்ஞானிகளில் ஒருவரான டாக்டர் எரிக் பெட்ஸிக் தலைமையிலான குழு ஒன்று அதிநவீன நுண்ணோக்கி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நுண்ணோக்கியைப் பயன்படுத்தி உயிரணுக்களின் செயற்பாடுகளை வீடியோ போல படமெடுக்க முடியுமாம். வழக்கமான நுண்ணோக்கிகளைப் போல வெளிச்சத்தை மேலிருந்து பாய்ச்சாமல், பக்கவாட்டிலிருந்து மிக நுண்ணிய தட்டையாக பாய்ச்சி நுண்ணோக்கியால் பார்க்கும் தொழில்நுட்பமான சூப்பர் ரிசால்வ்ட் ஃப்ளூரசென்ஸ் மைக்ரோஸ்கோப்பி என்ற கண்டுபிடிப்புக்காக டாக்டர் எரிக்குக்கு நோபல் …

மேலும் படிக்க

இலங்கையில் பயங்கர நிலச்சரிவு: 8 உடல்கள் மீட்பு, 300 பேர் வரை சிக்கியிருக்கலாம்?

இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டக் குடியிருப்பு பகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட நிலச் சரிவின் போது 300க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என உறவினர்களினால் அஞ்சப்படுகின்றது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்பதற்கான மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்பு குழுவினரால் இன்று நண்பகல் வரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கொஸ்லந்த பகுதியில் மீரியாபெத்த ஆற்று …

மேலும் படிக்க

விண்வெளிக்கு பொருட்களுடன் சென்ற ஆளில்லா ராக்கெட் வெடித்துச் சிதறியது: நாஸா

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்ற ஒப்பந்தக்காரர்களுடைய ஆளில்லா ராக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாஸா தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதாக அது தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பொறுப்பை தனியார் வசம் கொடுத்த பின் நடந்த முதல் நிகழ்வு இந்த விபத்து என்பது கவனிக்கத்தக்கது. செவ்வாய்க்கிழமை நேற்று விர்ஜீனியாவில் …

மேலும் படிக்க

போர்க்குற்றங்களை மறைக்க கோடிகளை வாரி இரைக்கும் இலங்கை அரசு

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை மறைக்க இலங்கை அரசு கோடிக்கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் த இன்டிபெண்டன்ட் ஊடகம் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசு தனது போர்க்குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், தனது நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக எட்டு பொதுமக்கள் …

மேலும் படிக்க