Tag Archives: உலகம்

மலேசியாவுக்கு இது மோசமான வருடம்: பிரதமர் நஜீப் ரஸாக் வருத்தம்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுடப்பட்டு விபத்து ஏற்பட்டதாக வந்த செய்தி அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்திருந்தார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் தெரிவித்தபோது, இந்த விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இது குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்த போது, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் அழைத்து வருத்தம் …

மேலும் படிக்க

உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி

295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டனர் என்று உக்ரைன் அரசுத் தரப்பு கூறியுள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு போயிங் 777 விமானம் சென்று …

மேலும் படிக்க

ஜெர்மனி, அர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது

கூடுதல் நேர ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதின. கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது …

மேலும் படிக்க

ஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேர் கொச்சி வந்தனர்

ஈராக்கில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேரும் ஏர்இந்தியா விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் கொச்சி புறப்பட்ட அவர்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். இந்திய செவிலியர்களை கேரள முதல்வர் உமன்சாண்டி வரவேற்றார். மேலும் ஈராக்கில் சிக்கி தவித்த இந்தியர்களை பத்திரமாக மீட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை – சிறப்பு விமானம் மூலம் நாளை கொச்சி வருகை

உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் பணி புரிந்து வந்தனர். அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி கூடலூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தூத்துக்குடி. மற்றவர்கள் …

மேலும் படிக்க

ஐசிசி தலைவரானார் சீனிவாசன்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஐசிசி தலைவராக உறுதிசெய்யப்பட்டதை மிகுந்த கவுரமாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் வலுவான …

மேலும் படிக்க

சதாம் உசேனை தூக்கிலிட்ட நீதிபதிக்கு மரண தண்டனை விதித்த ISIS தீவிரவாதிகள்

ராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ISIS தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவு கொடுத்தனர். பின்னர் பதுங்கு குழி …

மேலும் படிக்க

தந்தைக்கு லீவு அளிக்குமாறு 5 வயது சிறுமி கூகுள் நிறுவனத்திற்கு கடிதம்

புகழ்பெற்ற இணையதளமான கூகுள் நிறுனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் மகள் அந்நிறுவனத்தின் நிறுவனரான டேனியல் ஷிப்லேகாப்பிற்கு தனது மழலை கையெழுத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அச்சிறுமி கீழ்க்கணடவாறு எழுதியிருந்தாள். “எனது தந்தைக்கு வருகிற புதன் கிழமை பிறந்த நாள். அவருடன் இணைந்து அவரது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புகிறேன். ஆனால் அவருக்கு வார …

மேலும் படிக்க

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான படு பயங்கர கலவரம் வெறியாட்டம்

இலங்கையில் நடந்த கொடூரத்தை விவரிக்கும் செய்திகளை பல இணையதளங்கள் வெளியிட்டுள்ளன அதில் உங்கள் பார்வைக்கு: அளுத்கம மற்றும் தர்ஹா நகர பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு  சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் புத்த அமைப்பு வெறியர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 பள்ளிவாசல்களில்   புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இரத்த வெறியாட்டம் ஆடியுள்ளனர். அளுத்கம நகரில் நேற்று (15-6-2014) மாலை பொதுபல சேனாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த …

மேலும் படிக்க

ஃபார்முலா 1 நட்சத்திரம் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டார்

ஃபார்முலா 1 கார்பந்தயத்தின் நட்சத்திர வீரர் மைக்கேல் ஷூமேக்கர் கோமாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர். மேலும் அவரது ஆரோக்கியம் சீரடைய மறுவாழ்வு சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தென் கிழக்கு பிரான்சில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் ஷூமாக்கருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவருக்கு இரவும் பகலும் அயராது சிகிச்சை அளித்து மீட்ட மருத்துவர்களுக்கும் …

மேலும் படிக்க