Tag Archives: உலகம்

சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனத்தின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 200 பேர் காயம்

சவுதியின் கோபார் நகரில் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 219 பேர் காயமடைந்தனர். சவுதியின் கிழக்கு நகரான கோபாரில் உலகிலேயே மிகப் பெரிய ஆயில் நிறுவனமான சவுதி அராம்கோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் வேலைப்பார்த்து வருகின்றனர். …

மேலும் படிக்க

பிரபாகரன் தற்கொலை செய்துதான் இறந்தார்: கருணா பரபரப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்த கருணா, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்; தான் பிரபாகரனுக்கு அடுத்ததாக ராணுவ தளபதியாக இருந்தேன்; எனக்கு கீழ்தான் பிற தளபதிகள் இருந்தனர் என்றெல்லாம் …

மேலும் படிக்க

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர இடம் கிடைக்கும் வகையில் அந்த அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுசபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட்டிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மோகென்ஸ் லிக்கேடோப்ட் தலைநகர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். ஐநா பாதுகாப்பு சபையை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்கிற …

மேலும் படிக்க

போக்கோ ஹராம் தீவிரவாதிகள் 10 பேருக்கு மரண தண்டனை

போக்கோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளுக்கு சாத் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. நைஜீரியா, நைஜர், சாத் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் போக்கோ ஹராம் அமைப்பினர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அவர்கள் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சாத் நாட்டில் கைது செய்யப்பட்ட போக்கோ ஹராம் தீவிரவாதிகள் பத்து பேருக்கு ஜமினா நீதிமன்றம் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் …

மேலும் படிக்க

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம். தென் கிழக்கு நேபாளத்தைத் தாக்கியது

நேபாளத்தின் தென் கிழக்கில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்த விவரம் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சீர்குலைந்தன. இந்த நிலையில் இன்று மிதமான நிலநடுக்கம் நேபாளத்தைத் தாக்கியது. கோடாரி எனும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க

சீனாவில் இரசாயன ஆலையில் வெடிப்பு

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷாண்டொங் மாகாணத்தில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு ஒன்று நடந்ததாக சீன ஊடகங்கள் கூறியுள்ளன. ஷிபோ நகருக்கு அருகே அந்த இடத்தில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன. 5 கிலோமீட்டர்கள் தூரம் வரை அந்த வெடிப்பு உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. வெடிப்பை அடுத்து உருவான தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடுகின்றனர். பாதிப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

மேலும் படிக்க

உலக தடகள சாம்பியன் போட்டிகள் பீஜிங்கில் நாளை துவக்கம்

மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகத் தடகளச் சாம்பியன் போட்டிகள் சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் தொடங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும், இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை ஜமைக்காவின் உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி, பரிசோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்த காலத்துக்கு பின்னர் …

மேலும் படிக்க

தென் கொரியா – வட கொரியா போர் மூலும் சூழல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொரிய நாடுகளின் எல்லையில் நீடிக்கும் போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில், ராணுவத்தினர் இல்லாத ஒரு இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. தென் கொரியா தனது எல்லையில் ஒலிபெருக்கிகளை வைத்து கம்யூனிஸத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதற்கு வட கொரியா காலக்கெடு விதித்திருந்தது. அந்தக் காலக்கெடு துவங்குவதற்கு முன்பாகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கின்றன. தென்கொரிய அரசு, காலக்கெடுவுக்குள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால் தாக்குதல் …

மேலும் படிக்க

நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி

சுலோவாக்கியா நாட்டில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சுலோவாக்கிய நாட்டு விமானம் மேற்கு மாகாணத்தில் 40 பாராசூட் வீரர்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது செக்குடியரசு நாட்டின் எல்லையில் கெமன் என்ற பகுதியில் நடுவானில் 1500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக L-410 டிவின் இன்ஜின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த …

மேலும் படிக்க

எகிப்ப்தின் தலைநகர் கெய்ரோவில் குண்டுவெடிப்பு; 29 பேர் காயம்

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் வட பகுதியில் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்தில், சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் 6 காவலர்கள் உட்பட 29 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின் சத்தமும் அதிர்வும் நகரின் பல பகுதிகளில் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் இந்த குண்டு வெடித்தது. “காரில் வந்த ஒரு ஆள் இந்தக் கட்டடத்திற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு, பின்னால் வந்த மோட்டர் பைக்கில் ஏறிச்சென்றுவிட்டார். …

மேலும் படிக்க