Tag Archives: சென்னை

சென்னையில் 45 வருடங்களாக கொலு செய்யும் தம்பதிகள்….

சென்னை தண்டையார் பேட்டையில் நவராத்திரி கொலுவை முன்னிட்டு வி.சி.ராஜசேகரன், ஆர்.ராதிகா குடும்பத்தினர் அவரது வீட்டில் கொலு ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து 45 வருடமாக கொலு வைப்பது குறிப்பிடதக்கது. இதில் தெய்வங்கள், சிவன், பார்வதி, அத்திவரதர், தசவதாரம், தேவர்கள், போன்றவை வைக்கப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஏராளமான பேர் கண்டு களித்தனர்.

மேலும் படிக்க

தூய்மை இந்தியாவின் அவலம்…

சென்னை, இராயபுரம் 5 ஆம் மண்டலம் 49 வட்டத்தில், சோமு 4 வது சந்தில் பிள்ளைகளுக்கு கல்வி போதித்த பள்ளி வளாகம் இன்றோ குப்பை வளாகமாக துர்நாற்றம் வீசி, மக்களுக்கு நோய் தரும் வளாகமாக மாறி வருகிறது. இதனை எந்த வகையில் அபகரிக்கலாம் என்று மாநகராட்சியில் சதி வேலைகளை சிலர் நடத்தி வருவதால், இந்த வளாகம் மக்கள் நலன் பயன்பாட்டிற்கு தகுந்த இடமாக இருக்குமா என சந்தேகம் என பகுதி …

மேலும் படிக்க

சென்னை, திருவொற்றியூர், திலகர் நகர் வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவபட வழிபாடு!

சென்னை, திருவொற்றியூர் காலடிபேட்டை, திலகர் நகர் அருள்மிகு வைகுண்ட பெருமாள் 3 ஆம் ஆண்டு திருவுருவப்படத்தை வைத்து வழிபாடு செய்யும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவினையொட்டி, 03.10.2020 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரமும், தீப ஆராதனையும் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போலீஸ் ப்பளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் …

மேலும் படிக்க

திருவொற்றியூரில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக கவன ஈர்ப்பு போராட்டம்…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் மாநில தலைவர் திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் தலைமையில், வடசென்னை மாவட்டம் தலைவர் திரு. பிரேம்குமார் அவர்களின் முன்னிலையில், 02.10.2020 மாலை 5 மணியளவில், திருவொற்றியூரில் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் சார்பாக அரசுக்கு வைத்த கோரிக்கைகள்: ** கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக குடும்ப நல நிதி வழங்க வேண்டும். ** இந்தியா முழுவதும் தொடர்ந்து தொலைக்காட்சிகள் மற்றும் …

மேலும் படிக்க

“ஸ்வச் பாரத்” திட்டத்தை செயல்படுத்தும் PPFA

கடந்த 2019 அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு, பிரதமர் மோடி அவர்கள் கடந்த வருடம் “ஸ்வச் பாரத்” தூய்மை இந்தியா எனும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் நோக்கம் மக்கள் தங்கள் இல்லம் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாகும். அதன்படி, 02.10.2020 வெள்ளிக் கிழமை காலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், மாநில தலைவரும், …

மேலும் படிக்க

பிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…

பாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் 25.09.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் வட சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. M. கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையேற்று கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் இளைஞர் அணி சார்பாக நடை பாதை வியாபாரிகளுக்கு வங்கி கடன் நலத் …

மேலும் படிக்க

லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் தேர்வு…

2020-2021 ஆம் ஆண்டிற்கான லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை இராயபுரம் ஹெரிடேஜ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை கோயம்பேட்டில் சிம்சன் ஹோட்டலில் அரசு வழிக்காட்டுதலின்படி, சமூக இடைவெளி, முக கவசம் அணிந்த நிலையில் நடைபெற்றது.‌ இந் நிகழ்வில், திரு. PMJF Ln Dr N.R. தனபாலன் ( Past Dist.Governor) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். திரு. MJF Ln R. சம்பத் (International Director) அவர்கள் …

மேலும் படிக்க

விநாயக சதுர்த்தி விழா…

பழைய வண்ணையம்பதி, ஆண்டியப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியினை முன்னிட்டு, அரசு வழிக்காட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு காலையில் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் அம்மனும், விநாயகரும் சந்தனகாப்பில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காளியம்மன் செய்தியாக்கம், படப்பதிவு : “கிங்மேக்கர்” திரு.B. செல்வம்

மேலும் படிக்க

ஒண்டிவீரன் அவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் நினைவு நாள் அனுசரிப்பு…

மாதிகா ரிசர்வேஷன் போராட்ட சமிதி தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ். சார்பில் சென்னை கொருக்குப்பேட்டை அலுவலகத்தில் ஒண்டிவீரன் அவர்களுக்கு 249 ஆவது நினைவு நா‌ள் கொண்டாடப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு எம்,ஆர்.பி.எஸ் அலுவலகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு எம்.ஆர்.பி.எஸ் தலைவர் தரிசி குண்ட சேஷய்யா மற்றும் செயல் தலைவர் நக்கா லாசர், பொதுச்செயலாளர் கர்ரா ஆரோக்கியதாஸ், அட்மின் செயலாளர் வல்லேரி விஸ்வ பிரசாத் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசு தலைமை ஆசிரியை பாராட்டு…

74 ஆம் ஆண்டு இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழைய வண்ணை, சஞ்சீவிராயன் தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்திய தேசிய கொடியினை தண்டையார் பேட்டை H3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கொரோனா பாதிப்பில் இருந்த மக்களுக்கு களப்பணியில் சிறப்புடன் களப்பணிபுரிந்த இராயபுரம், தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தின் சார்பில் அலுவலர்களுக்கும், காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் …

மேலும் படிக்க