வெள்ளிக்கிழமை (?29-08-2014) அன்று தமிழகம் முழுவதும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் …
மேலும் படிக்கஇலங்கை அரசுக்கு எதிராக டியுஜே சார்பாக பத்திரிக்கையாளர்கள் போராட்டம்
இலங்கை வெளியுறவு துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் தவறாக சித்தரித்து படம், செய்தி வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சர்வதேச போர் குற்றவாளி ராஜபக்சேவை கண்டித்தும், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியுஜே) சார்பில் அதன் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமையில், சென்னை காமராஜர் சாலை, பீச் ரோடு, உழைப்பாளர் சிலை முன்பு 01.08.2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டமும் உருவ பொம்மை எரிப்பும் நடைபெற்றது.
மேலும் படிக்கசமஸ்கிருத வாரம் ஏற்புடையது அல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
CBSC பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசு, மத்திய மனித …
மேலும் படிக்கஅரசியல் அரைவேக்காடு யார்?- கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் …
மேலும் படிக்கமவுலிவாக்கம் கட்டிட விபத்து: ஒரு நபர் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு
சென்னை: சென்னை போரூர் அருகேயுள்ள மவுலிவாக்கத்தில் நடந்த கட்டட விபத்தை விசாரிக்கும் ஒரு நபர் ஆணையத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்: சென்னையில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து, இதுவரை 61 பேர் பலியான சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி ரெகுபதி …
மேலும் படிக்க10 இடங்களில் அம்மா மருந்தகங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
கூட்டுறவுத் துறையின் சார்பில் நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் அம்மா மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். மேலும் கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 அம்மா மருந்தகங்களை திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: ‘நியாயமான விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்திடும் வகையில் கூட்டுறவுத் துறையால் …
மேலும் படிக்கரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் உத்தரவு
ரமலான் மாதத்தையொட்டி பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, அவர்களுடைய நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க …
மேலும் படிக்கசொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய ஜெயலலிதா மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள தங்களது சொத்துகளை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் …
மேலும் படிக்கவில்லங்கச் சான்றிதழ் கட்டணமின்றி ஆன்லைனில் பார்க்கும் வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
வில்லங்கச் சான்றிதழ் கட்டணமின்றி ஆன்லைனில் பார்க்கும் வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் பதிவுத் துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை பொதுமக்கள் கட்டணமின்றி அத்துறையின் இணையதளத்தில் பார்க்கும் வசதியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பதிவுத் துறை மூலம் ரூ.9.2 கோடியில் கட்டப்பட்டுள்ள 18 சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது: பல …
மேலும் படிக்ககுஜராத்திலும் விரைவில் மலிவு விலை உணவகங்கள்!
அம்மா உணவகங்கள் போல் குஜராத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஏழை எளியோர்கள் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வெளியூர்களில் இருந்து வந்து செல்வோர் குறைந்த செலவில் உணவருந்தி செல்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை தொடங்கினார். இங்கு மலிவு விலையில் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் உணவு கிடைக்கிறது. அம்மா உணவகங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், உணவுகள் தரமான முறையில் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி