குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது விவசாய நிலத்தில் வேர்க்கடலை அறுவடை செய்யும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வேர்க்கடலை செடிகளுக்கு இடையில் சுமார் 10 அடி நீளம் மலை பாம்பு ஒன்று இருந்ததை கண்ட தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டு ஓட்டம் பிடித்தனர் . உடனடியாக இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

 

தகவலின் பெயரில் வனவர் தயாளன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள நாயக்கனேரி காப்பு காட்டி விட்டனர் இதனால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

Check Also

வேலூர் மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

வேலூர் மாவட்ட போலீஸ் பப்ளிக் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட செயல் தலைவர் சி பலராமன் அவர்களது அறிவுறித்தலின் பேரில் …