மக்களுக்கான சேவைக்காக

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும் ,” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிகாட்டுதலின்படி, வருகின்ற 10.09.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, வீராபுரத்தில் உள்ள கண்ணியம்மன் நகரில் ,” மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்” பொதுமக்களின் நலனுக்காக, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஆலோசனை கூட்டம், 03.09.2023, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில், திருமுல்லைவாயில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார் முன்னிலையில், மாவட்ட தலைவர் திரு. M. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ முகாமை மாநில தலைவர் அவர்கள் திருக்கரங்களில் துவக்கி வைக்கவும், அதற்கான ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் திரு. S. விஜயகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு. K. மேத்யூ, துணை செயலாளர்கள் திரு. M. சரவணன், திரு. B. மணி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …