வேலூர் மாவட்ட ஆட்சியருடன் ஒரு சந்திப்பு

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும்,ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி,

வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. சி. பலராமன் அவர்கள், 19-02-2024 அன்று, புதியதாக பொறுப்பேற்றுள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.V. R. சுப்புலட்சுமி ஐ.ஏ.எஸ். அவர்களை, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து மற்றும் பிப்ரவரி ( 2024) மாத ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து நமது சங்கத்தின் செயல்பாடுகளையும், கடந்து வந்த பாதையினையும் எடுத்துரைத்தனர். அத்துடன் உதயமாக உள்ள வேலூர் கிழக்கு மாவட்ட கிளை திறப்பு விழாவுக்கு வருகைத் தந்து சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனை ஆர்வமுடன் கேட்ட மாவட்ட ஆட்சியர், “கண்டிப்பாக கலந்துக் கொள்வேன். ஆனால் அன்றைய நாளில் எதிர்பாரத பணி நிமித்தம் ஏற்படும் போது வராததற்கு வருத்தப்பட வேண்டாம். அதே வேளையில் மாவட்ட அளவில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளுக்கு உங்களுக்கு அழைப்பு நிச்சயம் உண்டு ” என உறுதியளித்தார்.

இதற்காக மாவட்ட செய்தி, மக்கள் தொடர்புத்துறை உங்களுக்கு உதவிடும் எனவும் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது துணைத் தலைவர் கே. அறிவழகன், இணைச்செயலாளர். பெ. முத்தமிழன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Check Also

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் …