விமானம் கப்பல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த தென் சீன கடல் பகுதியில் முதலில் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் விமானம் கிடைக்காததால், அந்தமான் வரை தேடுதல் பரப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.
ஆனால் விமானத்தை யாரேனும் கடத்தியிருக்கலாம் என்றும் அதன் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை ஒருவர் துண்டித்து இருக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்தே, விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே இதனடிப்படையிலும் விசாரணை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. இடைவிடாமல் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்துள்ளோம். தென்சீனாவில் விமானத்தை தேடும் பணி முழுமையடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி