சென்னை மாநகராட்சி மண்டலம் 2, 16 வது வார்டு பகுதியில் உள்ள குளக்கரை கிராமம் கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் 30 வீடுகளுக்கு மேலாக மழை நீர் புகுந்துள்ளதால் குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர்.
மழை விட்டு வெயில் அடிக்கும் நிலையிலும் வடியாத மழை நீரால் தங்களது வாழ்வாதாரம் விடியுமா என ஏங்கி வரும் அப் பகுதி வாழ் மக்களின் குறைகளை தீர்க்க சென்னை பெருநகர மாநகராட்சி உடனடியாக முன் வரவேண்டும்.
ஒளிப்பதிவு: பிரசாந்த்
செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி