உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடப்பதற்கு இரு மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், பிரேஸிலின் நகரான ரியோ டி ஜெனிரோவில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வன்முறையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உள்ளூர் நபர் ஒருவரை போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்று தவறுதலாக நினைத்து அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக கருதி, போலீஸாருக்கும், நகர வாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. அந்த நகருக்கு அருகே, கார்களையும், …
மேலும் படிக்கஇந்தியாவில் உயிர்களைக் காப்பாற்ற பயன்படும் வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்: “உங்கள் அனைவருக்கு நன்றி. உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயனர்களாக உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ரஷியா ஆகிய நாடுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஒரு நாளில் 70 கோடி புகைப்படங்களும் 10 கோடி வீடியோக்களும் பகிரப்படுகின்றன. மார்ச் மாதம் வரை வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை 45 கோடியாக …
மேலும் படிக்கநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு 24.04.2014 அன்று கட்டாயமாக விடுமுறை தரவேண்டும் – தொழிலாளர் நல ஆணையம்
நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு 24.04.2014 அன்று கட்டாயமாக ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் 24.04.2014 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135B ன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி …
மேலும் படிக்கஅங்கீகாரமில்லாத 723 பள்ளிகளின் அட்மிஷன் ரத்து, மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை
அரசு அங்கீகாரம் பெறாத 723 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க தொடக்கக் கல்வி இயக்குநரகம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் 23,522 அரசு தொடக்கப் பள்ளிகள், 5,071 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட 34,871 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. தனியார் தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மட்டும் 6,278 பள்ளிகள் …
மேலும் படிக்கஐபிஎல் ஊழல்: நீதிபதி முட்கல் கமிட்டி விசாரணைகளை தொடரும்
இந்தியப் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணைகளை நடத்த முடிவெடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று இதற்கு தாங்கள் உடன்பட்டுள்ளதாக நீதிபதி முட்கல் தெரிவித்துள்ளார். முட்கல் குழுவின் விசாரணை அறிக்கையில் சில பரிந்துரைகளும் செய்யப்பட்டிருந்தன. ஐபிஎல் போட்டிகள் தொடர்பில் மேலும் விசாரணைகள் தேவை என்றும் அதிலும் குறிப்பாக 13 பேர்களின் நடத்தை தொடர்பாக கூடுதலாக ஆராயப்பட வேண்டும் …
மேலும் படிக்கசென்னையில் நாளை கோயம்பேடு மார்க்கெட், திரையரங்குகள் மூடப்படும்.
கோயம்பேடு மார்க்கெட் கோயம்பேடு மார்க்கெட், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாளை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அனைத்து வியாபாரிகளும் வாக்களிக்க ஏதுவாக, நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி ஓட்டு போட வசதியாக நாளை மார்க்கெட் மூடப்படுகிறது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மார்க்கெட் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்படும் திரையரங்கு உரிமையாளர் …
மேலும் படிக்கவாக்களிப்பதற்கு வசதியாக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வாக்களிப்பதற்காக வெளியூர்களுக்கு செல்ல விரும்புவோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வெளியூரில் இருந்து அலுவல் நிமித்தமாக சென்னையில் தங்கியிருக்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழகங்கள் இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளன. …
மேலும் படிக்க144 தடை உத்தரவை பயன்படுத்தி ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் …
மேலும் படிக்கமான் கராத்தே படத்திற்கு எதிராக குத்துச்சண்டை வீரர் புகார்
சென்னை: ஏப்ரல் 22 – சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மான் கராத்தே’ படத்திற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஒருவர், போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை திருவொற்றியூர், சாத்துமா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில், மாநில அளவிலான போட்டிகளிலும் …
மேலும் படிக்ககிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்த விசாரணை குழுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு
ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து முகுல் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே அறிக்கையை சமர்ப்பித்து இருந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீது விசாரணை நடத்த தனியாக குழு அமைக்க வேண்டும் என்றும் அந்த குழுவில் யார் இடம் பெறு வார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. ஷிவ்லால் யாதவ் தலை …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி