சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை. சென்னை, மன்னூர்பேட்டை, லொகையா நாயுடு தெரு, நம்பர். 15 ல் வசிப்பவர் எம். குரு. அதிமுக வை சேர்ந்த இவர் அந்தப்பகுதியின் (86 வது வார்டு) கவுன்சிலராகவும் உள்ளார். இவர் இன்று மதியம் 1மணியளவில் தனது …
மேலும் படிக்கஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450
சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 220 பேர் பலியானதாகவும், 450 பேர் …
மேலும் படிக்கதிருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை நிகழ்வு
திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வந்த ஆண்டாள் மாலையை சூடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பதி பிரம்மோத்ஸவத்தை ஒட்டி, “சூடிகொடுத்த சுடர் கொடி’ என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை கருட சேவையின்போது, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பப்பட்ட மலர் மாலை, மலர் ஜடை, மலர் கிளிகள், பட்டுவஸ்திரம் உள்ளிட்டவை திருமலைக்கு சனிக்கிழமை …
மேலும் படிக்கமதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா? சிவகார்த்திகேயன் விளக்கம்
திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஆகியோர் கலந்துகொண்டார்கள். மதுரைக்கு வருகிறபோது கமலும் சிவகார்த்திகேயனும் ஒரே விமானத்தில் வந்தார்கள். மதுரை விமான நிலையத்திலிருந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தபோது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள். ரஜினிமுருகன் படத்தில் நடித்ததற்காக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கோஷம் எழுப்பியவாறு சிவகார்த்திகேயனை முற்றுகையிட்டதால் பரபரப்பு …
மேலும் படிக்கசூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சரத்குமார் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேலும் கூறியதாவது:- சூரிய ஒளி மின்சக்தியை நவீன முறையில் செயல்படுத்த …
மேலும் படிக்கசென்னையில் நேற்றிரவு கன மழை
சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மேலும் படிக்கநேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமல், புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: நேபாளத்தில் வன்முறை
நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் இன்று முதல் அமலுக்கு வந்தது 240 ஆண்டுகளாக, மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி நடந்து வருகிறது. இதையடுத்து, மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது. கடந்த 13-ந்தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சாசனத்தின் ஒவ்வொரு பிரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கை தொடங்கியது. …
மேலும் படிக்கஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்
ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டு ராணுவத்தை நாட்டுக்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தயாயு மற்றும் செனகாகு தீவுகளுக்கு இருநாடுகளும் உரிமை கொண்டாடி வரும் நிலையில் சீனாவின் கிழக்குக் கடல் எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படும் சூழ்நிலை …
மேலும் படிக்கஅதிமுக ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: ஸ்டாலின்
நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசாரத்தின் 2ம் நாள் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, “நமக்கு நாமே விடியல் மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழுவதும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று …
மேலும் படிக்கடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் தீவிர விசாரணை
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை மற்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக பெறபட்ட ஆவணங்களைக்கொண்டு சிபிசிஐடி எஸ்.பி நாகஜோதி நாமக்கல்லில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவர் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றிய விஷ்ணுபிரியா திருச்செங்கோடு டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். காதல் விவகாரம் தொடர்பாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பொறியாளர் கோகுல்ராஜ் …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி