உலகம்

இலங்கையில் பயங்கர நிலச்சரிவு: 8 உடல்கள் மீட்பு, 300 பேர் வரை சிக்கியிருக்கலாம்?

இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டக் குடியிருப்பு பகுதியொன்றில் இன்று காலை ஏற்பட்ட நிலச் சரிவின் போது 300க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என உறவினர்களினால் அஞ்சப்படுகின்றது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்பதற்கான மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீட்பு குழுவினரால் இன்று நண்பகல் வரை 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கொஸ்லந்த பகுதியில் மீரியாபெத்த ஆற்று …

மேலும் படிக்க

விண்வெளிக்கு பொருட்களுடன் சென்ற ஆளில்லா ராக்கெட் வெடித்துச் சிதறியது: நாஸா

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்ற ஒப்பந்தக்காரர்களுடைய ஆளில்லா ராக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாஸா தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதாக அது தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பொறுப்பை தனியார் வசம் கொடுத்த பின் நடந்த முதல் நிகழ்வு இந்த விபத்து என்பது கவனிக்கத்தக்கது. செவ்வாய்க்கிழமை நேற்று விர்ஜீனியாவில் …

மேலும் படிக்க

போர்க்குற்றங்களை மறைக்க கோடிகளை வாரி இரைக்கும் இலங்கை அரசு

இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை மறைக்க இலங்கை அரசு கோடிக்கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் த இன்டிபெண்டன்ட் ஊடகம் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசு தனது போர்க்குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், தனது நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக எட்டு பொதுமக்கள் …

மேலும் படிக்க

சோதனையில் தோல்வியுற்ற ஐரோப்பிய வங்கிகள்

பொருளாதார நிலை மேலும் மோசமடைந்தால், வங்கிகள் அதனை எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்பதை மதிப்பிடுவதற்கான சோதனையில், ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பலவீனமான பல வங்கிகள் தோல்வி கண்டுள்ளன. 14 வங்கிகள் உடனடியாக பில்லியன் கணக்கான டாலர்கள் புதிய நிதியை தேடுவதுடன், இரு வாரத்துக்குள் தமது பலவீனங்களை திருத்துவதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி நிர்வாகிகள் கூறியுள்ளனர். இப்படியான 4 பலவீனமான வங்கிகளை கூடுதலாக இத்தாலி கொண்டுள்ளது. கடந்த …

மேலும் படிக்க

எபோலா மருந்து கண்டுபிடிக்க ஐரோப்பிய யூனியன் ரூ.200 கோடி ஒதுக்கீடு!

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த நோய் நுழையாமல் தடுக்க அனைத்து நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இந்த நோயை குணப்படுத்த அதிகார பூர்வமான மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே, மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. அமெரிக்காவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த நோய் பரவி விட்டது. எனவே அதை தடுக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் …

மேலும் படிக்க

ஸ்வீடனின் அமெரிக்க தூதர் அமெரிக்க இந்தியர் அஜிதா ராஜி

ஸ்வீடனின் தூதராக அமெரிக்க இந்தியர் அஜிதா ராஜியை பரிந்துரைத்தார் ஒபாமா. தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, மிகப் பெரும் அளவில் தேர்தல் நிதி சேகரித்துக்கொடுத்த அமெரிக்க இந்தியரான அஜிதா ராஜியை ஸ்வீடன் நாட்டுக்கான அமெரிக்க தூதராக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த அஜிதா ராஜி, 2012 அதிபர் தேர்தலின் போது, ஒபாமாவுக்காக 5 லட்சம் டாலர் அளவுக்கு நிதி சேகரித்துக் கொடுத்தவர்.

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கிய அமெரிக்க நிறுவனத்துக்கு அபராதம்

இந்திய ஊழியர்கள் எட்டு பேருக்கு குறைந்தபட்ச ஊதியத்துக்கும் மிகக் குறைவான சம்பளம் கொடுத்ததற்காக அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் மீது அந்நாட்டின் தொழிலாளர் நலன் அமைப்பு அபராதம் விதித்துள்ளது. மணிக்கு 100 ரூபாய்க்கும் குறைவான சம்பளம் மட்டுமே கொடுத்து வாரத்துக்கு 122 மணி நேரங்கள் கணக்கில் இந்த ஊழியர்கள் வேலைவாங்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் மற்றும் கூடுதல் நேர சம்பளம் தொடர்பான அமெரிக்க சட்டங்களை ‘தற்செயலாக தாங்கள் பின்பற்றத் தவறிவிட்டதாக’ …

மேலும் படிக்க

ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராட்டம் வலுக்கிறது.

ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சீன தேசிய தினத்துக்கு முன்னதாக ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். இது வரை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களிலேயே, செவ்வாய் கிழமை நடக்கும் போாரட்டம்தான் மிகப் பெரிய ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கில் இரவு நேரம் நெருங்கிய நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் நகரின் மையப்பகுதியிலும், முக்கிய சந்திப்புகளிலும் குவிய ஆரம்பித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னதாகக் கலைந்து போகச் சொன்ன சீனாவின் …

மேலும் படிக்க

அமெரிக்க வெள்ளை மாளிகையில் மோடி எழுதிவைத்த வாழ்த்துக் குறிப்பு

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி எழுதி வைத்த வாழ்த்துக் குறிப்பு. இதில், வெள்ளை மாளிகையில் தாம் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களையும், இரு நாட்டு உறவுகளுக்கான கட்டாயத்தையும் குறிப்பிட்டும், மக்களை இணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி எழுதியுள்ளார்.

மேலும் படிக்க

பிரதமர் மோடியை வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா

பிரதமராகப் பொறுப்பேற்ற பின் நரேந்திர மோடி, முதல் முறையாக கடந்த 25ம் தேதி அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வந்தார். அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா ‘கெம் சோ’ எப்படி இருக்கிறீர்கள் என குஜராத் மொழியில் நலம் விசாரித்தார். தொடர்ந்து இருவரும் …

மேலும் படிக்க