முக்கியசெய்திகள்

இடைக்கால ரெயில்வே பட்ஜெட் தாக்கல்,தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்தார். மக்களவையில் கடும் அமளிக்கிடையே இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நடப்பு நாடாளுமன்றத்தில் கடைசி பட்ஜெட்டை மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ரயில்வேயின் பங்கு அளப்பரியதாகும் என்று குறிப்பிட்டார். 2758 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை பாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலக்கைவிட …

மேலும் படிக்க

ராஜ் தாக்கரே, மகாராஷ்டிர அரசுக்கு சவால் ‘என்னை கைது செய்து பார்’:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டண சோதனைச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருவதாக மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடந்த மாதம் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, கட்டணம் செலுத்த மறுத்து வரும் மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் உள்ள பல சோதனச் சாவடிகளை அடித்து, நொறுக்கி நாசம் செய்து வருகின்றனர். இது …

மேலும் படிக்க

64-வருட ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த படமாக சிலம்டாக் மில்லியனர்

கடந்த மாதம் 64-வதுஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 64 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது பெற்றுள்ள படங்களில் சிறந்த படம் எது என்பது குறித்த ஏபிசி இணையதளம் ஓட்டெடுப்பு நடத்தி வருகிறது. இந்த ஓட்டெடுப்பின் முதல் ரவுண்டில் இந்திய படமான சிலம்டாக் மில்லியனர் முதல் இடத்தை பிடித்து  வருகிற 9 ந்தேதி  நடைபெறும் 2-வது கட்ட ஓட்டெடுப்புக்கு செல்கிறது. ஆஸ்கார் விருது வரலாற்றில் கடந்த 64 ஆண்டுகளில் சிறந்த …

மேலும் படிக்க

ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ்மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி இந்திய டாக்டர் சாதனை

ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ் மேக்கர்’ கருவியை இதயத்தில் பொருத்தி இந்திய டாக்டர் சாதனை படைத்துள்ளார். இதய துடிப்பை சீராக்க நோயாளிகளின் உடலில் ‘பேஷ் மேக்கர்’ என்ற கருவி பொருத்தப்படுகிறது. தற்போது ஆபரேசன் மூலம் அது பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆபரேசன் இல்லாமல் ‘பேஷ்மேக்கர்’ கருவியை இதயத்தில் அமெரிக்க வாழ் இந்திய வம்சாளி டாக்டர் ஒருவர் பொருத்தியுள்ளார். அவரது பெயர் விவேக் ரெட்டி. இவர் நியூயார்க்கில் உள்ள ‘தி மவுண்ட் சினாஸ்’ …

மேலும் படிக்க

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து

இனிமேல் செல்போன் பேசியபடி வாகனம்  ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹெட்செட் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டு செல்பவர்களும் இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயில்

கந்தக்கோட்டம் என அழைக்கப்படும் ஸ்ரீமுத்துகுமாரசுவாமி திருக்கோயிலின் பிரமோட்சவத்தின் ஒரு பகுதிதான் இராயபுரத்தில் நடைபெறும் ‘வேடர்பறித் திருவிழா’. அதாவது கந்தக்கோட்டத்தில் இருந்து புறப்படும் முருகப்பெருமான் வள்ளியை சிறைபிடித்து சென்று திருமணம் செய்வதற்காக இராயபுரத்தில் எழுந்தருளுவார். அந்த வகையில் நடைபெறும் இவ்விழாவில் இராயபுரம் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடும்  வருகிற பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. பல்லாண்டு காலமாக நடைபெறும் இம்மாபெரும் திருவிழாவில் இராயபுரம் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்க சிறப்பான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி S. ஜீவா …

மேலும் படிக்க

PPFA – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, வேளச்சேரி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோசியேஷன்(PPFA) மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் மாத இதழும் இணைந்து தென் சென்னை மாவட்ட போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோசியேஷன் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் வேளச்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். PPFA  வின் மாநில   இணை செயலாளர் J.J. வெங்கட்ராமன்          தலைமையில்,  தென்சென்னை மாவட்டத் தலைவர்       …

மேலும் படிக்க