முக்கியசெய்திகள்

காவல் துறை அதிகாரிகள் இடம் மாற்றத்தை ஏற்க மறுக்கும் மம்தா? தேர்தல் ரத்தாக வாய்ப்பு?

மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் 5 காவல்துறை அதிகாரிகளை தேர்தல் ஆணயம் இட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் எப்படி காவல் துறை அதிகாரிகளை மாற்ற முடியும்  என்று கேள்வி எழுப்பியுள்ளார். நான் யாரையும் இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது, இதனால் சட்டம் ஒழுங்கு கெட வாய்ப்புண்டு என்று …

மேலும் படிக்க

ஆஸ்திரேலியக் கப்பலுக்கும் கடலுக்கடியில் இருந்து வரும் சிக்னல் கேட்டது

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று, விமான கருப்பு பெட்டி எழுப்பும் ஒருவிதமான சிக்னலை கடலுக்கடியிலிருந்து கேட்டுள்ளதாக தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தும் ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரையில் கிடைத்துள்ள மிக முக்கியமான மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிகுறி இதுதான் என தேடல் பணி ஒருங்கிணைப்பாளர் அங்கஸ் ஹூஸ்டன் கூறியுள்ளார். ஓஷன் ஷீல்ட் என்ற கடற்படைக் கப்பல், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்து …

மேலும் படிக்க

ஆ.ராசா தொகுதியில்(நீலகிரி) பிஜேபி, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடி

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் குருமூர்த்தியின் வேட்புமனு இன்று நிராகரிக்கப்பட்டது. கட்சியின் அங்கீகார கடிதத்தை கொடுக்க தவறியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்பாளர் தரப்பில் கட்சியின் அங்கிகார கடிதத்தை சற்று தாமதமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும் கடிதம் இதுவரை மாவட்ட ஆட்சியர்க்கு கிடைக்கவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளதாம். இதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிரத்தினம் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள் …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் – சிக்னல் வந்த இடத்துக்கு கப்பல்கள் மற்றும் விமானங்கள் திசைதிருப்பம்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்க்கான தேடுதல் பணிகளை வழிநடத்துக்கின்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள், சீனக் கப்பல் ஒன்று இரண்டு முறை சிக்னல் ஒலியைக் கேட்டிருந்த இடத்துக்கு தேடுதலில் ஈடுபட்டுள்ள கப்பல்களையும் விமானங்களையும் திசைதிருப்பியுள்ளதாக கூறுகின்றனர். அந்த சீனக் கப்பலில் இருந்த கருவிகளைக் காட்டிலும் நவீன கருவிகள் தற்போது செல்லக்கூடிய கப்பல்களில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனர்கள் சிக்னலைக் கேட்க முடிந்திருப்பது ஒரு முக்கியமான மற்றும் ஊக்கம் தருகிற விஷயம் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் …

மேலும் படிக்க

தெனாலிராமன் படம் சம்பந்தமாக வடிவேலுவை மிரட்டினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – நாம் தமிழர் கட்சி சீமான் எச்சரிக்கை

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமாான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில தெலுங்கு அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. இன்னும் படமே …

மேலும் படிக்க

இந்த தேர்தல் தனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம் – திமுக தலைவர் கருணாநிதியின் உருக்கமான பேச்சு

கோவையில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கூறிய கருணாநிதி, கடுமையான எதிர்ப்பு இருந்தால் மோடி மட்டுமல்ல யாரும் இங்கு நுழையமுடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி என்ற பெயரில் ஜெயலலிதாவும் ஏமாற்றுவதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இளைஞர்கள் உறுதியுடன் இருந்தால் இந்திமொழி இங்கு நுழையமுடியாது என கூறிய அவர் தமிழர்களின் பண்பாட்டை காக்க உயிரை கொடுத்து உழைப்போம் …

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கன்னியாகுமரி வேட்பாளர் உதயகுமாரின் மனைவி திடீர் வேட்பு மனு தாக்கல்!

கன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்திலும் இறங்கியுள்ளார். இந்த நிலையில், வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று உதயகுமாரின் மனைவி மீரா உதயகுமார் நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு வந்து சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். மீரா உதயகுமார் மனு தாக்கல் செய்தது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு வேளை …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் சீனக் கப்பலுக்கு சிக்னல் கிடைத்தது?

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கறுப்பு பெட்டியை தேடும் உபகரணம் பொருத்தப்பட்ட கப்பலானது விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போன்றவற்றை கேட்டிருந்தாலும் அதனை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குறைவான நேரத்துக்கு மட்டுமே இந்த சமிஞ்சை கேட்டதாகவும், இந்த சமிக்ஞை காணாமல் …

மேலும் படிக்க

ஒரு புயல் வந்து கொண்டிருக்கிறது (A Storm is Coming) – ஆம் ஆத்மி பார்ட்டி

A Storm is Coming , புரட்சி ஆரம்ம்பித்துவிட்டது என்ற பெயரில் ஆம் ஆத்மி பார்ட்டி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொகுப்பு

மேலும் படிக்க

அனைத்து தியேட்டர்களில் இருந்தும் இனம் படம் நிறுத்தம் – லிங்குசாமி

நாளை முதல் இனம் படம் அனைத்து திரையரங்குகளிலுல் இருந்தும் நிறுத்தப்பட உள்ளது. படத்தின் தயாரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ். அதன் உரிமையாளர் லிங்குசாமி பத்திரிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க