அவதூறு வழக்குகள்: சுப்ரமணியசாமி அக்டோபர் 30–ந்தேதி நேரில் ஆஜராக சம்மன்

பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தனது டூவிட்டர் இணையதளம் பக்கத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறான கருத்துக்களை குறிப்பிட்டு கடந்த 17–ந்தேதி மற்றும் 20–ந்தேதி கட்டுரைகள் வெளியிட்டார்.

இந்த 2 கட்டுரைகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சுப்ரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் 2 கிரிமினல் வழக்குகள் சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 2 வழக்குகளும் மாவட்ட முதன்மை நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்குகளின் ஆவணங்களை பெறுவதற்காக வருகிற அக்டோபர் 30ந் தேதி சுப்ரமணியசாமி நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

Check Also

விநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னவே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *