Tag Archives: ஆன்மீகம்

இராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம் தேர்த்திருவிழா

சென்னை, இராயபுரம், ஸ்ரீபிரசன்ன இராகவப் பெருமாள் தேவஸ்தானம், 113 வது பிரமமோத்ஸவ விழாவின் பத்தாம் நாள் விழாவாக தேர்த்திருவிழா 22-04-19, திங்கள்கிழமை மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர்

மேலும் படிக்க

சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழா

சென்னை இராயபுரம், சிங்காரத் தோட்டம், ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற அக்னிச்சட்டி திருவிழா 27-3-19 புதன்கிழமை அதிகாலை 3-30 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது. வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, நேர்த்தி கடனை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஒரு சட்டி முதல் ஐநூறு சட்டி வரை ஏந்தி அம்மனை வணங்கியது …

மேலும் படிக்க

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர்ச் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பதட்டம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.பி. கோயில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்துவ கோயில் முழுவதும் தரைமட்டமாக்கி புதியதொரு ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. காவல்துறையினர் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி தேர்தலுக்கு பிறகு சுமுகமான முடிவுக்கு வரலாம் என கேட்டுக் கொண்டதால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது. இதனால் இன்று நடைபெறுவதாக  இருந்த கைவிடப்பட்டது …

மேலும் படிக்க

இராயபுரம், கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்

கல் மண்டபம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாள்: 29:11:2015 வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை சார்பில் சங்கநாதம் நிறுவனர்கள்: திரு.பாலமுருகன் , திருமதி.ஜெகசுந்தரி படத்தொகுப்பு: pvp சரவணன் படபுடிப்பு : யாமினி ஸ்ரீ வீடியோ இயக்கம்: கே.சங்கர், உதவி: v.யூகவேல்

மேலும் படிக்க

திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை நிகழ்வு

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வந்த ஆண்டாள் மாலையை சூடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பதி பிரம்மோத்ஸவத்தை ஒட்டி, “சூடிகொடுத்த சுடர் கொடி’ என்று பெயர் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை கருட சேவையின்போது, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பப்பட்ட மலர் மாலை, மலர் ஜடை, மலர் கிளிகள், பட்டுவஸ்திரம் உள்ளிட்டவை திருமலைக்கு சனிக்கிழமை …

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னவே யானை முகத்தவனே என்று மக்களால் போற்றி வணங்கப்படும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கணபதியைத் துதித்து வழிபட்டால் வினைகள் நீங்கி, கவலைகள் தீரும் என்று முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. தடைகளைத் தகர்க்கும் வல்லமை கொண்ட விநாயகரை தொழுது புதிய …

மேலும் படிக்க

நமக்கு தெரிந்த கோவில்கள் நமக்கே தெரியாத அதிசயங்கள்!

1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு …

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 மனிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் ஆவணித் திருவிழாவிற்கான …

மேலும் படிக்க

இராயபுரம், கல்மண்டபம் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

பிரதி வருடம் ஐப்பசி மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் சிவாலயங்கள்தோறும் நடைபெறுகின்ற அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்னர் அன்னத்தால் (வெள்ளை சாதம், காய்கறிகள் இன்னும் பல அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு பிறகு சிவபெருமான் மீது அலங்கரித்த அன்னத்தை தரிசனம் செய்த பக்தர்களுக்கு வழங்குவர். இந்த தரிசனம் காண்போர்க்கு, அன்னத்தை உண்போர்க்கு அவர்களது வாழ்வில் அன்னம் குறைவின்றி கிடைக்குமென ஐதீகம். இராயபுரம், கல்மண்டபம் ஸ்ரீ அங்காள …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப …

மேலும் படிக்க