Tag Archives: அம்மன்

பழைய வண்ணாரப்பேட்டை காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா…

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள 96 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் நவராத்திரி விழா மிகச்சிறப்பாக கொன்டாடப்பட்டது. காளியம்மன் என்றாலே உக்கிரமான தெய்வம் என சொல்வதுண்டு. ஆனால், இங்கே வீற்றிருக்கும் இந்த அம்மனை உக்கிரமாக பார்த்தால் உக்கிரமானவளாகவும், சாந்தமாக பார்த்தால் சாந்த சொரூபியாகவும் காட்சிதருவது சிறப்பம்சமாகும். இத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோயிலில் 8 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா 07.10.2021 வியாழக்கிழமை அன்று …

மேலும் படிக்க

கல்மண்டபம் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவம் ஆரம்பம்…

11-03-2021 மஹாசிவராத்திரியினை முன்னிட்டு, இராயபுரம், கல்மண்டபம், ஆதம் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் திருக்கோயிலின் பிரம்மோற்சவம் விழா கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி இரவு முழுவதும் நான்கு கால பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.12.03.2021 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில், மயான கொள்ளை நடைபெற்றது. இராயபுரம் மேம்பாலம் அருகில் நடைபெற்ற மயான கொள்ளையினை முடித்த அம்மன், இராயபுரத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு ஆனந்த காட்சியினை தந்து அருள் பாலித்த வண்ணம் …

மேலும் படிக்க

அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு பாலாயம்…

சென்னை, வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்பன் தெரு, 1 ஆவது சந்து 4 ஆம் எண்ணில் உள்ள பழம் பெரும் ஆலயமாய், மக்களை காத்தருளும் பக்தி தருகின்ற சக்தியாய் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடத்திடுவதன் முதற்கட்டமாக 10.12.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோமாதா பூஜைகள் நடந்தன. இதன் பிறகு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு ஆலயத்தில் ஆகமவிதிப்படி பாலாயம் செய்விக்கப்பட்டது.இந்த பக்திமயமான …

மேலும் படிக்க

விநாயக சதுர்த்தி விழா…

பழைய வண்ணையம்பதி, ஆண்டியப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியினை முன்னிட்டு, அரசு வழிக்காட்டுதலின்படி சமூக இடைவெளி விட்டு காலையில் அம்மனுக்கும், விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாலையில் அம்மனும், விநாயகரும் சந்தனகாப்பில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க, பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காளியம்மன் செய்தியாக்கம், படப்பதிவு : “கிங்மேக்கர்” திரு.B. செல்வம்

மேலும் படிக்க

சிங்காரத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் & கார்மெண்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. 26-03-2014 அன்று நடைபெற்ற எழுத்துப் போட்டியில் 300 பேர் கலந்து கொண்டனர். அம்மன் திருவாசகத்தை 10 நிமிடத்துக்குள் எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 27-03-2014 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட கல்யாண சீர்வரிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை ஒட்டிய வீதிகளில் அம்மன் சீர்வரிசையினை ஊர்வலமாக எடுத்துச் …

மேலும் படிக்க