உலகம்

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பரப்பு குறைந்துள்ளது: ஆஸ்திரேலியன் பிரதமர் டோனி அப்பாட்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தேடப்படுகின்ற இடத்தின் பரப்பளவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக கடலுக்கடியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் விமானத்துடைய கருப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக, சீனாவில் வர்த்தக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற நேரத்தில் செய்தியாளர்களிடம் திரு.அப்பாட் கூறினார். இந்த விமானத்தின் பாகங்களை இப்போது மொத்தம் 47 ஆயிரம் சதுர …

மேலும் படிக்க

எஜமானர் கொலை வழக்கில் சாட்சி சொல்ல நீதிமன்றம் வந்த நாய்.

பிரான்ஸில் தன்னுடைய எஜமானரைக் கொன்ற குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக ஒன்பது வயது நாயொன்று  நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்தது. தலைநகர் பாரிஸில் 59 வயது எஜமானி ஒருவருடன் டாங்கோ எனும் லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய் வசித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு அந்த எஜமானி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கு தற்போது பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நாயின் எஜமானி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவ்வழக்கு …

மேலும் படிக்க

ஆஸ்திரேலியக் கப்பலுக்கும் கடலுக்கடியில் இருந்து வரும் சிக்னல் கேட்டது

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று, விமான கருப்பு பெட்டி எழுப்பும் ஒருவிதமான சிக்னலை கடலுக்கடியிலிருந்து கேட்டுள்ளதாக தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தும் ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுவரையில் கிடைத்துள்ள மிக முக்கியமான மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிகுறி இதுதான் என தேடல் பணி ஒருங்கிணைப்பாளர் அங்கஸ் ஹூஸ்டன் கூறியுள்ளார். ஓஷன் ஷீல்ட் என்ற கடற்படைக் கப்பல், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்து …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் – சிக்னல் வந்த இடத்துக்கு கப்பல்கள் மற்றும் விமானங்கள் திசைதிருப்பம்

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்க்கான தேடுதல் பணிகளை வழிநடத்துக்கின்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள், சீனக் கப்பல் ஒன்று இரண்டு முறை சிக்னல் ஒலியைக் கேட்டிருந்த இடத்துக்கு தேடுதலில் ஈடுபட்டுள்ள கப்பல்களையும் விமானங்களையும் திசைதிருப்பியுள்ளதாக கூறுகின்றனர். அந்த சீனக் கப்பலில் இருந்த கருவிகளைக் காட்டிலும் நவீன கருவிகள் தற்போது செல்லக்கூடிய கப்பல்களில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனர்கள் சிக்னலைக் கேட்க முடிந்திருப்பது ஒரு முக்கியமான மற்றும் ஊக்கம் தருகிற விஷயம் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் சீனக் கப்பலுக்கு சிக்னல் கிடைத்தது?

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடி வரும் தனது கப்பல்களில் ஒன்று விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போல ஒன்றை கேட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கறுப்பு பெட்டியை தேடும் உபகரணம் பொருத்தப்பட்ட கப்பலானது விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சமிக்ஞை போன்றவற்றை கேட்டிருந்தாலும் அதனை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. குறைவான நேரத்துக்கு மட்டுமே இந்த சமிஞ்சை கேட்டதாகவும், இந்த சமிக்ஞை காணாமல் …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பற்றிய உண்மைகள் வேண்டும்: உறவினர்கள் வலியுறுத்தல்

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த சீனர்களின் உறவுக்காரர்கள் சுமார் முப்பது பேர் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று, விமானம் சம்பந்தமான விடைகள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். விமானத்துக்கு என்ன ஆனது என்ற உண்மை தெரிய வேண்டும் என்றும், அதற்கான ஆதாரங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் கூறும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு அவர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் தொலைந்துவிட்டது என்று …

மேலும் படிக்க

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் – ராஜபக்சே உத்தரவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக அதிபர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே, அந்நாட்டு மீன்வளத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சிறைகளில் 98 தமிழக மீனவர்கள் இருப்பதாக, அந்நாட்டு மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. நேற்று, இலங்கைக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமை …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை வேறு திசைகளில் தேடுதல் – புதிய ஆதாரம்

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சிகள் இது வரை நடந்து வந்த இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியிலிருந்து 1,100 கிமீ வடகிழக்காக மாறுகின்றன. இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்று ஆஸ்திரேலியா கூறுகிறது. ராடார் பதிவுகள், அந்த விமானம், மேலும் மிக விரைவாக பறந்து கொண்டிருந்தது, எரிபொருளை அதிகமாக செலவழித்தது, என்று காட்டுவதை அடுத்து இந்த தேடல் வேட்டையில் மாற்றம் வருகிறது. வெள்ளிக்கிழமை காலை …

மேலும் படிக்க

இலங்கை மீதான அமெரிக்கா கொண்டு வந்த ஜெனீவா தீர்மானம் நிறைவேறியது

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக  அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்  ஜநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தீர்மானத்தை நிராகரித்தது. இலங்கை மீதான தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. இந்தியா வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. இந்தோனேசியாவும் வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொண்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு ஐநா மனித உரிமைகள் …

மேலும் படிக்க

தாய்லாந்து சாட்டிலைட் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்களை கண்டுபிடித்தது?

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் 300 பாகங்களை தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்த சாட்டிலைட் படம் தாய்லாந்து நாட்டின் சாட்டிலைட்டில் இருந்து மார்ச் 24 ம் தேதி படம் பிடிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு நாள் முன்புதான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 122 பொருட்களை பிரெஞ்ச் சாட்டிலைட்  படம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த 300 பொருட்களும் தென்மேற்கு பெர்த்திலிருந்து சுமார் 2700 கி.மி தொலைவில் இருப்பதாக …

மேலும் படிக்க