அமுரா

பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பு : தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வ அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்பதிவு 2 மணி நேரம் அதிகரிப்பட்டு, காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று, தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவை 2 மணி நேரம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். வடகிழக்கு மாநிலங்களில், காலை 7 …

மேலும் படிக்க

இந்திய தேர்தல்: கிடைக்கும் பணத்திற் கேற்ப செய்திகளை வெளியிடும் ஊடகங்கள்?

பிபிசி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இந்திய ஊடகங்கள் கிடைக்கும் பணத்திற் கேற்ப செய்திகளை வெளியிடுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் அச்சங்கங்கள் அனைத்தும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 800 தினசரிகள் வெளி வருகின்றன. ஆனால் இந்த தினசரிகள் காசு வாங்கி கொண்டு அதற்கு ஏற்றவாறு செய்தி வெளியிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தியாவின் மாபெரும் பிரசுரிக்கும் நிறுவனம் ஒன்று, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிறப்பிதழ்கள், இணைப்புகள் என்று …

மேலும் படிக்க

பள்ளி ஆண்டு விழா! விளையாட்டு உற்சாகம் இங்கே…

இன்று தனியார் பள்ளிகள் கல்வியை மட்டுமே சிறந்த முறையில் தருவது மட்டுமல்லாது, தங்களது பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வன்ணம் பள்ளி ஆண்டு விழாவினை நடத்தி அவர்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் திருவொற்றியூரில் உள்ள செயிண்ட் அந்தோணி மேல்நிலைப் பள்ளி நடத்திய ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் ஆர். பிச்சை, மாண்புமிகு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்டின் …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் வீட்டில் சோதனை

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியன் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர். கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா மற்றும் பரிக் அப்துல் ஹமித் ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர். அந்த விமானிகளின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோநிலை ஆகியவைகள் குறித்து ஆராய இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. இந்தச் …

மேலும் படிக்க

மறுபடியுமா! நடிகை அஞ்சலி மாயம்?

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார்.  இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி …

மேலும் படிக்க

தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை நிறுத்த முடியாது? தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்?

தேர்தல் முடியும் வரை வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனைகளை தளர்த்த முடியாது என்றும், அரசு ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படத்தை மறைக்க போக்குவரத்து துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியபோது, தேர்தலுக்காக பறக்கும் படையினர் நடத்தும் சோதனையின்போது, ஆதாரம் …

மேலும் படிக்க

விமானத்தை கடத்தியிருக்கலாம்? மலேசியன் பிரதமர் ரஸாக்

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் கடந்த வாரம் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு சென்றபோது மலேசியா- வியட்நாம் பகுதியில்  காணாமல் போனது. இந்த விமானம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் …

மேலும் படிக்க

ட்வெண்டி 20 உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், அகான் கலைநிகழ்ச்சி

வங்கதேசத் தலைநகரில் நாளை மறு நாள் நடக்கும் ட்வெண்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில்      ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் புகழ்பெற்ற ராப் பாடகர் அகானும் (Akon) கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி டாக்காவின் பங்காபந்து மைதானத்தில் தொடங்குகிறது. விழா தொடர்பாக ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்ததில் தான் மிகவும் …

மேலும் படிக்க

உக்ரைன் நெருக்கடி: அமெரிக்க ரஷ்ய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை

உக்ரைனில் உருவாகியுள்ள நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய வெளியுறவுத்துறைச் செயலர் செர்கெய் லவ்ரொவ்வும் லண்டனில் சந்திக்கவுள்ளனர். க்ரைமீயா பகுதி உக்ரெய்னிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்பது பற்றி அப்பகுதி மக்களிடையே வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அமெரிக்க ரஷ்ய அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து விவாதிப்பதற்கான கடைசி சந்தர்ப்பம் இதுதான். அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும், உக்ரைனில் ரஷ்யத் …

மேலும் படிக்க

மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு சிறை: கேஜ்ரிவால் எச்சரிக்கை

ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்களை ஜெயிலுக்கு அனுப்புவேன் …

மேலும் படிக்க