பிரெஞ்சு போட்டோகிராபரின் படத்தை பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல். உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த படம் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக இணைய தளங்களில் விமர்சனம் வெளியானது. இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் கூறியது, தேயம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடமாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த …
மேலும் படிக்கஉத்தம வில்லன் டீசர்
ஆயிரத்தில் ஒருவன் சினிமா குறித்த அரசியல் சர்ச்சை
1965 இல் வெளியாகிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு அரசியல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், ஏப்ரலில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ”மாதிரி நன்னடத்தை விதி மீறல்” …
மேலும் படிக்கவேட்பாளரே இல்லாமல் தேர்தல் பிரச்சாரம்: விஜயகாந்த்
பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிகவிற்கான தொகுதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், இன்று மாலை திருவள்ளூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த். நேற்று பாஜக தனது கூட்டணி விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்திருந்தது. இதற்காக அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருவதாக இருந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படாமல் போனதால் ராஜ்நாத் சிங்கின் சென்னைப் பயணம் ரத்தானது. …
மேலும் படிக்கபத்திரிகையாளர் ஞாநி ஆம் ஆத்மி’யில் இணைகிறார் : சென்னையில் போட்டி?
மூத்த செய்தியாலரும் அரசியல் விமர்சகருமான ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார். அவர் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியில் நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்டோரும் சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இணைந்தனர். இந்நிலையில் எழுத்தாளர் ஞாநி , தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து ‘தீவிர …
மேலும் படிக்கமலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா!
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போன பின்பும் கிட்டதட்ட நான்கு மணிநேரம் விண்ணில் பறந்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசியமான இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள். கடந்த சனிக்கிழமை மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு சென்ற விமானம் மாயமானது. அதில் பெரும்பாலான பயணிகள் சீனர்கள். அந்த விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன ஆனது என்பதை அறிய அவர்களின் குடும்பத்தார் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் விமானம் …
மேலும் படிக்க“கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்” முதல்வர் ஜெயலலிதா – முக. ஸ்டாலின்
தி.மு.கழக இணைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது “கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்” முதல்வர் ஜெயலலிதா என்று முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டிய வழியில் இந்த 92 வயதிலும் சற்றும் தளராமல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் அதிவேகத்தோடு பணியாற்ற வைக்கும் தலைவர் கலைஞர் அவர்களையும் நமது கழகத்தையும் இணையவெளியில் தினம் தினம் காத்து நிற்க்கும் எனதருமை …
மேலும் படிக்கமுன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க கோர்ட் ரத்து செய்து உத்தரவு
அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயானி மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. நியூயார்க்கில் இந்திய துணை தூதர் தேவயானி மீது வீட்டு பணியாளருக்கு விசா வாங்கியதில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர், அவமதிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. பின்னர் ஜாமீனில் வெளியான அவர் ஐ.நா. பிரதிநிதி குழுவிற்கு மாற்றப்பட்டார். இந்த நியமனத்தில் இழுபறி ஏற்பட்ட நிலையில் இந்தியாவிற்கு பணியிடமாற்றம் …
மேலும் படிக்ககாணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பா?
காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதறல் துண்டுகள் என்று கூறி சீன அரசின் இணையதளத்தில் (Chinese State Administration of Science, Technology and Industry for National Defense) மூன்று செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கிளம்பிய விமானம் சீன கடற்பகுதியில் காணாமல் போனது. அந்த விமானம் கடலில் விழுந்ததா, கடத்தப்பட்டதா என்று ஒரு விவரமும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் …
மேலும் படிக்கவீரப்பன் கூட்டாளிகள் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசு மனு தள்ளுபடி
தமிழக–கர்நாடாக எல்லையான பாலாறு பகுதியில் கடந்த 1993–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9–ந் தேதி சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் வைத்த கண்ணி வெடி தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 22 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்திய கர்நாடகா மாநில மைசூர் தடா கோர்ட்டு கடந்த 2001–ம் ஆண்டு, சந்தன வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த …
மேலும் படிக்க