அமுரா

சென்னை இராயபுரம் ஆம் ஆத்மி சார்பில், மக்களின் துயர் நீக்க காய்கறி விற்பனை!

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியவாசிய பொருட்கள், காய்கறிகள் விலையேறிய நிலையில் மக்கள் தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு மக்களின் தேவையினை அறிந்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. S.A.N. வசீகரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, உடனடி நடவடிக்கையாக தங்களது சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனத்தில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து 06.04.2020 காலை 8 …

மேலும் படிக்க

மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கு PPFA உதவி…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி, திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் திரு. S. இதாயத்துல்லா அவர்களது ஏற்பாட்டில் மணலி பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 2, தீயணைப்புத்துறை மற்றும் மணலி காவல் நிலையம், மாதவரம் காவல் நிலையம் ஆகியவற்றில் மக்கள் களப்பணியாற்றுபவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தேநீர், பிஸ்கெட் ( சுமார் …

மேலும் படிக்க

காவல்துறையினருக்கு உதவியாக PPFA…

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு, பகல் பாராது தங்கள் பணியினை செய்து வருகின்றனர். பெருநகர சென்னை மாநகர காவல்துறையினருக்கு உதவிடும் வகையில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆணையாளர் திரு. அமுல்ராஜ் அவர்களிடம் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr. லி.பரமேஸ்வரன், மாநில இளைஞர் அணி …

மேலும் படிக்க

ஊரட‌ங்கு நடை பெறும் பொழுது சென்னை, தண்டையார் பேட்டையில் சாலை மறியலால் பரபரப்பு…

சென்னை தண்டையார் பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள சமூக நலக் கூடத்தில் வெளி மாநில மக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். இதனை கேள்வியுற்ற அப் பகுதி வாழ் மக்கள் அவர்களை அங்கு தங்க வைக்க கூடாதென எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வீதிக்கு வந்து ஆர்பாட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் அளவில் பேச்சு வார்த்தை நடத்தியும் மக்கள் …

மேலும் படிக்க

கொரோனோ வைரஸை மக்களிடமிருந்து விரட்டும் பணியில் PPFA!

26.03.2020 வியாழக்கிழமை காலை 8 மணியளவில், திருவான்மியூர் மண்டலம் 10, வார்டு 181 , பகுதி 38 பகுதியில் உள்ள மருதீஸ்வரர் நகர் மற்றும் எல்.பி. ரோடு, சுப்பு தெரு, காமராஜ் நகர், சிவகாமிபுரம் ஆகிய அனைத்து தெருக்களிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திடும் வண்ணம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறையினரின் அனுமதியுடன் நடைபெற்ற விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி துறை ஊழியர்களுடன் நமது போலீஸ் பப்ளிக் …

மேலும் படிக்க

நாங்க அடங்கமாட்டோமே…

நாடு முழுவதும் ” கொரோனா” வைரஸ் பீதியில் கொஞ்ச கொஞ்சமாக மக்களாகிய நாம் வெளியே வர முடியாம முடங்கியுள்ள நிலையில், இராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலையில் உள்ள குப்பைத் தொட்டி அருகே ” எலிகள்” அட்டகாசமாய் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் சூப்பரான காட்சியினை தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆக அவங்க ( எலிகள்) சொல்ல வருவது என்ன நீங்க வீட்டுக்குள்ளே… நாங்க ரோட்டிலே… எங்களை அடக்க முடியுமா… அடங்கி …

மேலும் படிக்க

வட சென்னையில் மக்களின் ஊரட‌ங்கு நடைபெற்ற போது எடுக்கப்பட்ட காட்சிகள்

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் குறித்து நாட்டின் சுகாதார நலன் கருதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்தை கருத்தில் கொண்டு  பொதுமக்கள் இன்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை நாடுமுழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். இதனைதொடர்ந்து இன்று வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பேருந்துகள் இயங்கவில்லை வணிக வளாகங்கள், கடைகள், பேருந்து நிலையம், …

மேலும் படிக்க

இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா!

இராயபுரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா 21.02.2020 முதல் 05.03.2020 வரை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி மயானக் கொள்ளையும் மற்றும் அதனை தொடர்ந்து அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றது‌. 11 ம் திருவிழாவாக (03.03.2020) செவ்வாய்க்கிழமையன்று வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது. ஒளிப்பதிவு: வே. கந்தவேல்செய்தியாக்கம்: ” …

மேலும் படிக்க

சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில் அன்னதானம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி தினங்களில், இராயபுரம், சிங்காரத் தோட்டம், சின்ன சேனியம்மன் திருக்கோயிலில், நடைபெறும் அன்னதானம் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் 23-02-2020 மாலை 7 மணியளவில், தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு ( சுமார் 300 க்கு மேல்) சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இது பற்றி நம்மிடம் பேசிய சென்னையிலுள்ள விருதுநகர் நாடார் இந்து நற்பணி மன்ற நிர்வாகிகள், “இந்த அன்னதானம் கடந்த …

மேலும் படிக்க

அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி…

நூற்றாண்டை நோக்கி நடைபோடும் தன் ஆலயத்தினை நாடி வரும் பக்தர்களுக்கு தன் சக்தியால் நல்வாழ்வினை தந்து கொண்டிருக்கும் வண்ணையம்பதி, சிவஞானபுரம், ஆண்டியப்ப முதலி 1 வது சந்தில் வீற்றிருக்கும் அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இத் திருக்கோயிலின் சிறப்பு நிகழ்வாக “பத்ரகாளியம்மன் அருள்மகள்” திருமதி கலையரசி அவர்கள், தன்னை நாடி வருகின்ற பக்த கோடிகளின் குறைகளை தீர்த்து வைத்திடும் வகையில் ” அருள் …

மேலும் படிக்க