அமுரா

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் நவம்பர்-2015 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் நவம்பர்-2015 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஜீனியஸ் ரிப்போர்ட்டர் நவம்பர்-2015 பதிப்பு  

மேலும் படிக்க

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு ஹைதராபாத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நடைபெற்றது. தனது சீக்கட்டி ராஜ்யம் தெலுங்கு திரைப்படத்தின் முன்திரையிடல் காட்சியை விஜயவாடாவில் நடத்த அனுமதி கோரியும், அப்படத்தை காண வருமாறு அழைப்பு விடுக்கவும் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது அழைப்பை சந்திரபாபு நாயுடு ஏற்றுக் கொண்டதாகவும் கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், …

மேலும் படிக்க

தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கோவை காய்கறி சந்தையில் வழக்கமாக விற்கப்படும் விலையிலிருந்து 20 சதவீதம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், கோவை காய்கறி சந்தையில் கேரட், பீன்ஸ், தக்காளி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென என உயர்ந்துள்ளது.  மழை காரணமாக ஊட்டி, பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரட் …

மேலும் படிக்க

​இந்தியாவில் மதவெறிக்கு இடமில்லை என்பது பீகார் தேர்தல் மூலம் நிரூபனம்: ஜவாஹிருல்லா

இந்தியாவில் மதவெறிக்கும், வெறுப்புணர்விற்கும் இடமில்லை என்பதை பீகார் மக்கள் தங்களது வாக்குச்சீட்டுகள் மூலம் நிரூபித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, ஊடகத்துறை, விமானத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அந்நிய முதலீட்டை கொண்டுவரும் மத்திய அரசின் முடிவு ஆபத்தானது என கூறினார்.  நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கும் …

மேலும் படிக்க

இந்திய விமானப் படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய விமானப்படையின் 83வது ஆண்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மோடி, தைரியத்துடனும், உறுதியுடனும் நாட்டிற்காக வீரர்கள் உழைத்து வரும், விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் வான்வழியாக நம்மை பாதுகாப்பதுடன், பேரிடர் காலங்களிலும் முன்னின்று செயல்படுவதாக மோடி பெருமை கூறியுள்ளார். I salute our air force personnel on Air Force Day. They have always …

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் சங்கத்தை பிளவுப் படுத்துவதாக அர்த்தம் இல்லை என்றும் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெறவுள்ள நிலையில் சேலத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் தங்களது பிரசாரத்தை தொடங்கினர். முன்னதாக செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய விஷால், நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சியை …

மேலும் படிக்க

​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சுயேட்சை உறுப்பினர் ரஷீத் என்பவர், நேற்று மாலை தனது நண்பர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. ரஷீத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக தேசிய மாநாட்டு …

மேலும் படிக்க

வேதாளம் டீசர் – வெளியீடு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

வேதாளம் டீசர் நேற்று நள்ளிரவில் யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. டீசர் நன்றாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது வரை யூடியுப்பில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் படிக்க

லாரி வேலைநிறுத்தம் வாபஸ்:பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், சுங்கச்சாவடிகள் மற்றும சுங்கக் கட்டணங்களை முறைப்படுத்துவது …

மேலும் படிக்க

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த …

மேலும் படிக்க