சினிமா

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக புதிய நிர்வாக இயக்குநரை வாழ்த்துகிறோம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு.Dr. K. ஆல்பி ஜான் வர்கீஸ் IAS, அவர்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது. அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ …

மேலும் படிக்க

புதிய மாவட்ட ஆட்சியரை வாழ்த்துகின்றோம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. Dr. T. பிரபு சங்கர் IAS. , அவர்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது. அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் …

மேலும் படிக்க

உலகம் அழிவை நோக்கி…

சமீபகாலமாக பருவ நிலை மாற்றம் என்பது அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பர்டூ பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்ததை விட தற்போது பூமியின் வெப்ப நிலை 1.5 டிகரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில் இது 2 டிகரிக்கு மேல் அதிகரித்தால் மாரடைப்பு ஏற்படும் நிலையினை இந்த வெப்பத்தினால் வர வாய்ப்பு உண்டு. …

மேலும் படிக்க

இளைஞர்களின் எதிர்பார்ப்பில்…

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை ஊராட்சியில் 2021 – 2022 ஆம் நிதியாண்டில் 1.46 லட்சத்தில் நூலகம் கட்டப்பட்டது. இந்நூலக கட்டிடம் இது நாள் வரை பயன்பாட்டுக்கு வராமல் மூடிய நிலையில் உள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதை மாவட்ட ஆட்சியர் கண்டும் காணாது இருப்பதேன் என மக்கள் வேதனை. இது மட்டுமல்லாமல், இந் நூலக கட்டிடத்தின் முன் இரவு நேரத்தில் குடிமகன்கள் மது அருந்தும் பாராக மாற்றியுள்ளது தான். போட்டி …

மேலும் படிக்க

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பயணச் செலவுகளை வழங்க வேண்டும் மாலையில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்று கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க

வேலூரில் மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்தது!

வேலூர் அண்ணா சாலை டோல்கேட் சந்திப்பில் இருந்து சின்ன அல்லாபுரம் செல்லும் சாலையில் சாலையோரம் நின்ற மரத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென முறிந்து கீழே விழுந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அதில் சிக்கிக் கொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் …

மேலும் படிக்க

சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி மேயர் சுஜாதா தொடங்கி வைப்பு!!

வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட 30, 34 வது வார்டுகளில் உள்ள தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்க நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ 1 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சைதாப்பேட்டை கானாறு தெருவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் …

மேலும் படிக்க

குடியாத்தம் அருகே போலி மருத்துவர் கைது போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜிட்டப் பள்ளி பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட எஸ்பி மணிவண்ணனுக்கு புகார் சென்றுள்ளது. இதனை அடுத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு எஸ். பி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் மற்றும் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் இணைந்து புகாரில் சிக்கிய கிளினிக்கில் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மஸ்தான் , …

மேலும் படிக்க

மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்

கந்தனேரி மணல் குவாரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் சங்கர் தலைமையில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் வேண்டா இது குறித்து கனி மனவளத்துறையில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்களின் பட்டியல் …

மேலும் படிக்க

மலை கிராம பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வெள்ளைக்கல் மலைப்பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி . இவர் கடந்த 7ஆம் தேதி வெட்டியப்பன் கோயிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குப்புசாமியின் மனைவி மல்லிகா தனது கணவரை போலீசார் பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், கணவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க