செய்திகள்

மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பயணச் செலவுகளை வழங்க வேண்டும் மாலையில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்று கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க

வேலூரில் மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்தது!

வேலூர் அண்ணா சாலை டோல்கேட் சந்திப்பில் இருந்து சின்ன அல்லாபுரம் செல்லும் சாலையில் சாலையோரம் நின்ற மரத்தின் ஒரு பகுதி நேற்று இரவு திடீரென முறிந்து கீழே விழுந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் அதில் சிக்கிக் கொண்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் …

மேலும் படிக்க

சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி மேயர் சுஜாதா தொடங்கி வைப்பு!!

வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட 30, 34 வது வார்டுகளில் உள்ள தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்க நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தில் ரூ 1 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சைதாப்பேட்டை கானாறு தெருவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் …

மேலும் படிக்க

மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்

கந்தனேரி மணல் குவாரியிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் சங்கர் தலைமையில் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் வேண்டா இது குறித்து கனி மனவளத்துறையில் இருந்து மாட்டு வண்டி உரிமையாளர்களின் பட்டியல் …

மேலும் படிக்க

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட கடை போலி ரசீது மூலம் மின் இணைப்பு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குணராமநல்லூர் ஊராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட மத்தளம் பாறை மெயின் ரோட்டில் 0.324.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தின் வடக்கு பக்கம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பம்மிங் ஆபீஸ் முன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து குணராமநல்லூர் ஊராட்சியை சார்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர் கட்டிடம் கட்டி உள்ளார் அதற்கு எந்த ஆவணங்களும் இல்லாததால் போலி ரசீது …

மேலும் படிக்க

பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை ஜூஸாகக் குடிப்பதை விட, துண்டுகளாக மென்று சாப்பிட்டால் சத்து அதிகம் என்றும் கூறப்படுகிறது. பேரிக்காய் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் பேரீச்சம்பழத்திற்கு உண்டு. புற்றுநோய் திசுக்கள் இருந்தால், பேரிக்காய் சாப்பிட்டால் அவை அகன்று விடும். புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அடங்கிய பேரிக்காய் …

மேலும் படிக்க

5 மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை

5 மாநில தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. மாநில வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு: *தெலங்கானாவில் 3.17 கோடி,* *மத்தியப் பிரதேசத்தில் 5.6 கோடி,* *ராஜஸ்தானில் 5.25 கோடி,* *சத்தீஸ்கர் 2.03 கோடி,* *மிசோரம் 8.52 லட்சம்* வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் ” சிறப்பு ஆலோசனை கூட்டம்”

சிறப்பு ஆலோசனை கூட்டம்” ,08.10.2023, காலை 10.30 மணியளவில், சென்னை , இராயபுரம் நிர்வாக அலுவலகத்தில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டுவி தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.15 ஆம் ஆண்டினை நோக்கி வெற்றி தடைபோடும் நமது இதழுக்கான வளர்ச்சி, செயல்திட்டங்கள் வருகைத் தந்த ஆசிரியர்குழுக்குளுடன் கலந்து …

மேலும் படிக்க

ஏரிக்கோடி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதவல்லி பாளையம் ஊராட்சி ஏரிக்கோடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். செதுவாலை மற்றும் மருதவல்லி பாளையம் கிராமத்திற்கு தனிநபர் நிலத்தின் வழியாக சென்று வந்தனர். மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நந்தகுமார் எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் . அதன் பேரில் அணைக்கட்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து …

மேலும் படிக்க

மணல் கடத்தல் 10 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

வேலூர் மாவட்ட எஸ்பி தனி படை போலீசார் கீ. வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கனிமவளக் கொள்ளையை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்திய சத்யா, பிச்சாண்டி, கபிலன், தீபக், காளிதாஸ், கோவிந்தன், வெங்கடேசன், முருகன், பொன்னுசாமி, கன்னியப்பன், சரவணன், ஹரி, கார்த்திக்,வேலு, சதீஷ், ஆகிய 15 பேரும் இது வழக்கு பதிந்த போலீசார் அவர்களின் 10 பேரை கைது செய்து …

மேலும் படிக்க