முக்கியசெய்திகள்

மகப்பேறு கால விடுமுறை 3 மாதத்திலிருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு தாய்மை அடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது. …

மேலும் படிக்க

சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம்

சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி, தமாகா சார்பில் இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைப்பதுடன், காலாவதியான சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி தமாகா சார்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையரகம் பூட்டு போடும் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் …

மேலும் படிக்க

மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது

சேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் …

மேலும் படிக்க

ஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டெல்லி மானக்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த நாணயத்தை பிரதமர் மோடி இன்று காலை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களை கலையில் ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி என்றும், இளமை பருவத்தில் ஆசிரியர்கள் கற்பித்தது நமது நினைவில் என்றும் இருக்கும் எனவும் கூறினார். ஒவ்வொருவரின் வாழ்க்கையை …

மேலும் படிக்க

புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …

மேலும் படிக்க

அரிசி குடோனாக மாறும் ராஜபக்சே கட்டிய விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தனது சொந்த ஊரில் கட்டிய விமான நிலையம், தற்போதைய அரசால் அரிசி குடோனாக மாற்றப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தல என்ற இடத்தில் ராஜபக்சே விமான நிலையத்தைக் கட்டி திறந்தும் வைத்தார். அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், தற்போது ஒரே ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தை மூடிவிட்டு அரிசி குடோனாக மாற்றும் நடவடிக்கையில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று …

மேலும் படிக்க

இந்தியாவில் 7 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகள்

கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், 7 புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பரிந்துரையை ஏற்று, இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த நோட்டுகளில் 7 புதிய அம்சங்கள் இடம்பெறும் என்றும், முதற்கட்டமாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் …

மேலும் படிக்க

ஆந்திராவில் வெங்காய லாரி கடத்தல்

ஆந்திராவின் ராவலுபடு பகுதியில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஆந்திராவை நோக்கி லாரி ஒன்று வந்தது. ராவலுபடு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சாலையோரம் தூங்கியுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்காயத்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஓட்டுநர் லாரி இல்லாததைக் கண்டு …

மேலும் படிக்க

சென்னை, வேளச்சேரியில் இரவில் தொடர் மின்வெட்டு: மக்கள் கொந்தளிப்பு

சென்னையை அடுத்த வேளச்சேரியில் தொடர் மின்வெட்டை கண்டித்து, மின்துறை அலுவலகத்தை பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டனர். சென்னை முழுவதும் வெயில் கடந்த ஒரு வாரமாக வறுத்தெடுத்து வருகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த வேளச்சேரியில், ராஜலெட்சுமி நகர், தண்டீஸ்வரம், கஜநாதபுரம், பேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவும் மின் தடை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி …

மேலும் படிக்க

ஷாப்பிங் வித் ரவுடி! 6 டெல்லி போலீஸ் பணியிடை நீக்கம்

ரவுடி மனோஜ் பக்கர்வாலாவை டெல்லி போலீசார் கடந்த 27ம் தேதி திகார் சிறையில் இருந்து ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதன் பிறகு திகார் சிறைக்கு வரும் வழியில் தனக்கு ஷூ வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுமாறும், அவ்வாறு அழைத்துச் சென்றால் போலீசாருக்கும் ஷூ வாங்கிக் கொடுப்பதாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து துணை சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மனோஜுடன் ஷாப்பிங் …

மேலும் படிக்க