அமுரா

கொச்சியில் உலகின் முதலாவது சூரிய சக்தியால் இயங்கும் விமான நிலையம் திறப்பு

உலகிலேயே சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் செயல்படும் விமான நிலையத்தை கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று திறந்து வைத்தார். கொச்சி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 12 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இந்த மின்சாரத்தை சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்த கொச்சி விமான நிலைய நிறுவனம் முதற்கட்டமாக கடந்த மார்ச் 2013-ல் 100 கிலோவாட் மின்சார …

மேலும் படிக்க

மங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம், 1,857 கி.மீ. உயரத்திலிருந்து எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை அனுப்பியது. முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்திற்கு விண்கலத்தை …

மேலும் படிக்க

இந்தியாவில் இந்தியரை அவமானப்படுத்திய இஸ்ரேல் காப்பி கடை

இமாசலப் பிரதேசம் கசோலில் இந்தியப் பெண் ஒருவர் இஸ்ரேலிய காபி ஷாப் ஒன்றில் உணவு தராமல் நிராகரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி பரபரப்பாக பரவி வருகின்றது. கசோலில் அமைந்துள்ள மிகப் பிரபலமான இஸ்ரேலிய காபி ஷாப்பில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த காபி ஷாப் பெரும்பாலும், இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்குத்தான் என்றும், இந்தியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அக்கடையினைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார். ஸ்டீபன் கயே என்கின்ற டெல்லியினைச் சேர்ந்த …

மேலும் படிக்க

அண்ணா பல்கலைகழகம்: கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் டிசம்பர்’2016 முதல் அமல்

அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ள கேள்வித்தாள் நடைமுறை மாற்றம், நிகழாண்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மூன்றாம் செமஸ்டர் தேர்வில் அறிமுகம் செய்யப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். பொறியியல் முடிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததைத் தொடர்ந்து, திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்கும் நோக்கில் கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்காக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தலைமையில் 9 பேர் குழுவை பல்கலைக்கழகம் நியமித்தது. இந்தக் குழு புதிய தேர்வு …

மேலும் படிக்க

உச்ச நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது உச்ச நீதிமன்றத்துக்கும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்துக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஜெயலலிதா பற்றி அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் எங்கும் பரபரப்பு நிலவுகிறது. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட அதிமுகவினர், இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்தனர். அதே போல, நந்தம்பாக்கத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்காசி, மேலகரம் தஞ்சாவூர், கரூர், நாமக்கல், விழுப்புரம், …

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றி

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது.  இதையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதோடு அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க கூடிய புதிய நாடொன்றை உருவாக்குவதாக பிரதமர் …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 74. சுவாசக் கோளாறு காரணமாக சுவ்ரா முகர்ஜி கடந்த 7-ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே இதய நோயாளியான அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை 10.50 மணியளவில் இயற்கை எய்தினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் குடியரசுத் …

மேலும் படிக்க

பாங்காக் இந்து கோவிலில் குண்டு வெடிப்பு, பலர் பலி

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயம் பெரிய குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் குறைந்தது 16 பேர் பலியானதுடன் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். குண்டு வெடிப்பு காரணமாக பீதியில் ஓடிய மக்கள் கூட்டத்தால், நகரின் முக்கிய சாலைகள் முடங்கியதுடன் அவசர சேவைகளுக்கு பெரிய தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள இந்த …

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின்(TUJ) சுதந்திர தின விழா அடையார், இந்திரா நகர், இளைஞர் விடுதியில் (15.08.2015) அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் (TUJ) சார்பாக நடைபெற்றது. பத்திரிகை துறையில் தனக்கென தனி முத்திரையை பதித்த தோழர் தராசு ஷியாம் அவர்கள் தேசிய கோடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இலவச மருத்துவ முகாம் தொடக்கி வைத்து பேசிய டாக்டர் C.M.K.ரெட்டி பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சங்க …

மேலும் படிக்க