அமுரா

விஜய் சேதுபதியின் “மெல்லிசை” சினிமா டீசர்

விஜய் சேதுபதி புதிதாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் மெல்லிசை இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்திரி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி போன்ற படங்களில் இவருடன் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. “மெல்லிசை” என்று பெயர் கொண்டாலும் படத்தின் டீசர் த்ரில்லர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க

சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்

சிரியாவில் இரு வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தற்கோலை தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஹசாக் என்ற இடத்தில் உள்ள காஷ்மன் மற்றும் மஹாட்டா ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இரட்டைத் கார் வெடிகுண்டு  தற்கொலை தாக்குதலில் ஒரு பெண் 2 குழந்தைகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  வாக்காளர் விவரங்களை http://www.elections.tn.gov.in/ இந்த இணையதளத்தில் காணலாம்.

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்பு

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறைஅமைச்சராக இருந்த மால்கம் டர்ன்புல் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின் போது கவர்னர்-ஜெனரல் பீட்டர் காஸ்க்ரொவ்  மால்கம் டர்ன்புல்லுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்ட பின் பேசிய டர்ன்புல் வலிமையான நாட்டை உருவாக்க கூட்டாக சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்.

மேலும் படிக்க

தேமுதிக யாருடன் கூட்டணி? விஜயகாந்த் பதில்

தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தேமுதிக மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை என்று கூறினார்.  இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாள். தே.மு.தி.க. தொடங்கி 10 ஆண்டுகள் …

மேலும் படிக்க

தொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்

இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வகையிலான ஆய்வை மேற்கொள்ளுமாறு உலக வங்கிக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வை உலக வங்கி மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி, தொழில் தொடங்க சாதகமான சூழல் உள்ள மாநிலங்களில் …

மேலும் படிக்க

ஈரான் படத்திற்கு இசையமைத்தற்கு பத்வா: ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம்

ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார். முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மொழி திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை …

மேலும் படிக்க

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்-2015 பதிப்பு

ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்-2015 பதிப்பை இங்கே டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். ஜீனியஸ் ரிப்போர்ட்டர் செப்டம்பர்-2015 பதிப்பு

மேலும் படிக்க

“விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது. வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் திரைப்படங்கள் பல வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தப் படமும் விருது பெறவில்லை. தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் …

மேலும் படிக்க

அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கு தமிழர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திடப் பிறந்த நம் அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, பேரறிஞர் …

மேலும் படிக்க