அமுரா

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

இராயபுரம் அருள்மிகு ஸ்ரீ சஞ்சிவிராயன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம். நாள்: 31-08-2014

மேலும் படிக்க

வாழ்த்துகிறோம் DSR சுபாஷ் அவர்களை… DSR சுபாஷ் தலைமையிலான TUJ விற்கே அங்கீகாரம்: IJU மாநாட்டில் அறிவிப்பு

  ஆந்திராவில்(திருப்பதி) நடந்த அகில இந்திய மாநாட்டில் (IJU), DSR வழி கண்ட DSR சுபாஷ் தலைமையிலான சங்கத்திற்கே அங்கீகாரம் என்ற அறிவிப்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்ற எங்களின் தலைவா DSR சுபாஷ் அவர்களே! நீங்கள் ஏழு மலைகளின் நகரில் வெற்றிக் கொடி நாட்டிய ஏகலைவன். தந்தையின் வழியில் நின்று எங்களை தலை நிமிரச் செய்தவரே! சங்கத்தை சிதைக்க நினைத்த புல்லுருக்களையும், வல்லுறுக்களையும் அற வழியில் சிதைத்து எங்களை …

மேலும் படிக்க

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சந்திப்பு

‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அர்னால்டுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.  சென்னை வந்திருக்கும் அர்னால்டு, ஏற்கனவே தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி பிற்பகல் 2.45 மணியளவில் …

மேலும் படிக்க

இந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டு பிடிப்பு:மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370ன் பாகங்களா?

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ஆவுஸ்திரேலியாவின் தேடுதல் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை எனவேதான் …

மேலும் படிக்க

நடிகர் விஜய் க்கு எச்சரிக்கை

ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள படம் கத்தி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம், ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது, ராஜபக்சே உறவினர்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி, தமிழ் அமைப்புகள், கட்சிகள் கத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 65 அமைப்புகள் ஒன்றாக இணைந்து கத்தி படத்துக்கு எதிர்ப்பு காட்டியுள்ளன. ஆனால் லைகா நிறுவனமோ எங்களுக்கு ராஜபக்சேவுடன் …

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியட்நாம் பயணம்

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். இன்று அங்கு அவர் வியட்நாம் பிரதமர், துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஆளும் கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர்களை சந்திக்கிறார். எண்ணெய் துறையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் அவர் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட உள்ளார்.

மேலும் படிக்க

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் – பிரதமர் மோடி

தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறும் தனது நண்பர்களையும், நல விரும்பிகளையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் உள்பட நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி, அவரது 64ஆவது பிறந்த நாளைக் கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ள நிலையில், மோடி இவ்வாறு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து மோடி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: எனது பிறந்த நாளுக்காக …

மேலும் படிக்க

திருப்போரூர் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரத வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, 2012-இல் பாலாலயம் செய்யப்பட்டு சன்னிதிகள் மூடப்பட்டு உற்சவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்து முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை …

மேலும் படிக்க

ஐ படம் இசை இன்று வெளியீடு: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பங்கேற்பு

சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் “ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நட்சத்திர நடிகர் அர்னால்ட் பங்கேற்கிறார். “ஆஸ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் “ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடலாசிரியர் கபிலன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் …

மேலும் படிக்க