ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் மற்ற நாடுகளுடன் மிகப்பெரிய சண்டையில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும், தங்களிடம் மோத நினைத்தால் அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் அவர் ரஷ்ய ராணுவம் நவீன தொழில்நுட்பங்களுடன் வலிமைபெற்று வருவதாகவும் ராணுவ வலிமையில் தனது அரசு முழு கவனம் செலுத்தி வருவதகாவும் தெரிவித்தார்.
மேலும் படிக்கதனிக்கட்சி தொடங்குகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். என்ற பேச்சு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது தொட்ர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கலந்தாலோசித்து வருவதாகவும் கூடிய சீக்கிரம் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியில் ஒரு வழியாக புலி வந்துருமோ?
மேலும் படிக்கஐபிஎல் சூதாட்டம்: முட்கல் குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்பிப்பு
ஐபிஎல் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் சங்கத் தலைவர் என். ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் நியமித்திருந்த நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, தனது விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட உறையில் இன்று உச்ச நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட நீதிபதி டி.எஸ்.தாகுர் தலைமையிலான அமர்வு, இது தொடர்பிலான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் …
மேலும் படிக்க31 ரயில்களின் பயண நேரம் குறைப்பு: ரயில்களின் புதிய கால அட்டவணை
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 31 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படுள்ளதாகவும் சில ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SALIENT FEATURES OF PUBLIC TIME TABLE – September 2014 INTERIM BUDGET TRAINS: I.INTRODUCTION OF NEW TRAINS: A.* PREMIUM TRAINS: 1.*Train No.12528/12527 Kamakya – Chennai Central Air-conditioned (Weekly) Premium Exp. (via Malda Town, …
மேலும் படிக்க‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டு பங்கேற்கிறார்
தீபாவளிக்கு வெளியாகவுள்ள, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் இப்படத்தை இணைந்து தயாரிக்கும் ரமேஷ் பாபு, அமெரிக்காவில் உள்ள அர்னால்டு வீட்டில் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் ‘ஐ’ இசை வெளியீடு நிகழ்ச்சியில் தாம் கலந்துகொள்வதாக, அவரிடம் அர்னால்டு கூறியுள்ளார். இதனை …
மேலும் படிக்கவிநாயக சதுர்த்தி: தமிழர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
வெள்ளிக்கிழமை (?29-08-2014) அன்று தமிழகம் முழுவதும் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் …
மேலும் படிக்க2 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி இப்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நேற்று நடந்தது. இதில் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி …
மேலும் படிக்கஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளையை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்
மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. எனவே, தனியார் பேருந்துகட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகட்டணம் 10 முதல் 20 % வரை உயர்த்தப்படுவதாகவும், இக்கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் …
மேலும் படிக்கஜப்பான் மொழியில் மோடி ட்வீட்
பிரதமர் ஜப்பான் செல்லவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானிய மொழியில் ட்விட்டரில் தனது கருத்துகளை தனது தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜப்பானிய மொழியில் மொத்தம் 8 ட்வீட்களை பதிவு செய்துள்ள அவர், அவற்றில் இரண்டில் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேவையும் டேக் செய்துள்ளார். இது குறித்து ஆங்கிலத்தில் அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில், “ஜப்பானிய நண்பர்கள் பலர் நான் அந்நாட்டு மக்களுடன் ஜப்பானிய மொழியில் நேரடியாக தொடர்பு …
மேலும் படிக்கஈராக்கில் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய் உருக்கமான வேண்டுகோள்
ஈராக்கில் ISIS பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள அமெரிக்க பத்திரிக்கையாளரின் தாய், தனது மகனை விடுவிக்க கோரி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அமெரிக்க பத்திரிக்கையாளரை கொன்று விடப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அந்த அமைப்பின் தலைவருக்கு அந்த அபலைத்தாய் விடுத்துள்ள கோரிக்கையில், இஸ்லாமிய அரசின் தலைவரான உங்களது கையில் எனது மகனின் உயிர் உள்ளது. அவனை, முகமது நபியின் வழித் தோன்றல் கலிபாவான நீங்கள் மன்னித்து உயிர் பிச்சை வழங்க …
மேலும் படிக்க