ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்கநித்யானந்தாவிற்கு இன்று ஆண்மை பரிசோதனை
பெங்களூரு அருகேயுள்ள பிடதியில் அமைந்துள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக பாலியல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி ராமநகரம் மாவட்ட நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அவரை ஆண்மை பரிசோதனைக்கு இன்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் படிக்கஇத்தாலி கடற்படை வீரர் நேரில் 2 வாரங்கள் ஆஜராக விலக்கு : உச்ச நீதிமன்றம்
இந்திய கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலி கடற்படை வீரர் ஒருவர், இரண்டு வாரங்களுக்கு காவல்துறை முன் ஆஜராக தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு இத்தாலி கடற்படை வீரர்களில் ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் இரண்டு வாரங்களுக்கு ஆஜராக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்கதிருமண விழா:ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் துணை ஆசிரியர் கே. சங்கர் இல்லத் திருமண விழா
திருமண விழா: PPFA தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் துணை ஆசிரியருமான கே. சங்கர் அவர்களின் இல்லத் திருமண விழா.
மேலும் படிக்கதிருமண விழா: TNPMHSSMA மாநில பொருளாளரும், ஷேபா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் J.B. விமல் அவர்களின் இல்லத் திருமண விழா
திருமண விழா: TNPMHSSMA மாநில பொருளாளரும், ஷேபா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் J.B. விமல் அவர்களின் இல்லத் திருமண விழா
மேலும் படிக்கபாஜக எம்எல்ஏவை சுட்டுக் கொலை செய்ய முயற்சி: தலைநகர் டில்லியில் பரபரப்பு
ஷாதரா தொகுதி சட்ட மன்ற பாஜக உறுப்பினர் ஜிதேந்தர் சிங் ஷன்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல மர்ம நபர் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணிந்தபடி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஜிதேந்தர் வீட்டுக்கு வந்த மர்ம நபர், மூன்று முறை துப்பாக்கியால் சுட முயன்றபோதும் அவரது குறியில் இருந்து ஜிதேந்தர் சிங் தப்பினார். அவரது வீட்டு வாயில் அருகே மேல் தளப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் …
மேலும் படிக்கவெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை உத்தரவு
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், …
மேலும் படிக்கதமிழகத்தில் பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்
தமிழகத்தில், 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகள் 41 இடங்களில் இயங்கி வருகின்றன. வாகன ஓட்டிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த …
மேலும் படிக்கரஷ்யா மீது புதிய பொருளாதார தடை? ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை
ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகுமென ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் ப்ரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகளை பொறுத்து புதிய பொருளாதார தடைகள் அமையும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லையெனில், …
மேலும் படிக்கபாகிஸ்தானில் பயங்கர கலவரம் – பிரதமர் அலுவலகம், அரசு டிவி அலுவலகம் சூறை
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகுமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மத குரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இப்போது கூட்டணி அமைத்து, போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இம்ரான் கானும், தார் உல் காதிரியும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் முன்பாக கூடி தர்ணாவில் ஈடுபடும்படி தங்கள் கட்சி தொண்டர்களுக்கு …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி