செய்திகள்

பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்த நிலங்கள் பாஜக வெளியிட்ட வீடியோ

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு எதிராக எட்டு நிமிட வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிடடார். இந்த வீடியோவுக்கு சோனியா காந்தி குடும்பம் பதிலளிக்க வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது. ராபர்ட் வதேரா பற்றி பிரியங்கா விளக்கட்டும் இதுகுறித்து கூறிய பிரசாத், குஜராத் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் பிரியங்கா காந்தி, …

மேலும் படிக்க

கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் பிரபலமான நூறு பேர், டைம் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்

கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் டைம் நூறு பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்காவது இந்தியர் ஆவார். இவரை சுகாதாரப் போராளி என வர்ணித்துள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு, மலிவு விலை நாப்கின்கள். தென்னிந்தியாவின் சிறு நகரத்தைச் (கோயம்புத்தூர்) சேர்ந்த இவர், தன் மனைவி பழைய துணிகளைச் சேமிப்பதைப் பார்த்து எதற்காக எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி “என் மாதவிடாய்க் காலத்தில் இவை உதவும்” எனச் …

மேலும் படிக்க

அமாலா பால் எனக்கு கிடைத்த பொக்கிஷம் – டைரக்டர் விஜய்

டைரக்டர் விஜய் – அமலா பால் திருமணம் ஜுன் 12ம் தேதி நடைபெற இருப்பதாகவும், திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின. மேலும் விஜய்யை அமலா பால் மதம் மாறச் சொன்னதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. [pullquote]அவர் உண்மையிலயே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன். -டைரக்டர் விஜய்[/pullquote] இந்நிலையில் முதன் முறையாக அமலா பாலுடனான காதல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு …

மேலும் படிக்க

சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது: பிரதமர் மன்மோகன்சிங்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் பாஜகவில் நேற்று வெள்ளிக்கிழமை இணைந்தார். அதற்காக பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங்கிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ‘எனக்கு வருத்தமாக உள்ளது. எனினும் அவர்களை கட்டுப்படுத்த எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்கள்’ என்று அவர் பதிலளித்தார். மன்மோகன் சிங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, பாஜக தலைவர் நரேந்திர …

மேலும் படிக்க

செயலிழந்த தமிழக தேர்தல் ஆணைய வெப்சைட்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவியாக இருந்த தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளம் (http://elections.tn.gov.in/)நேற்று முதல்செயலிழந்தது. இதுபற்றி கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன் குமார், இது ஹார்ட்வேரில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோளாறுதான். அந்த தளத்தில் இருந்த தகவல்களை வேறொரு தளத்தில் பாதுகாத்து வைத்துள்ளோம். இதனால், எவ்வித தகவல் இழப்பும் ஏற்படவில்லை என்று கூறினார். இன்று இணையதளம் …

மேலும் படிக்க

தமிழகத்தில் மக்களவைக்கு சரியாக 73.67%, ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% வாக்குப்பதிவு:தேர்தல் கமிஷன்

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 73.67 சதவீதம் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் 64.47% ஓட்டு பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களின் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தொகுதிவாரியாக பதிவான ஓட்டுக்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. எண் தொகுதியின் பெயர் வாக்குப்பதிவு % 1  திருவள்ளூர் (தனி) …

மேலும் படிக்க

பெங்களூர்-நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்(17235) இன்று ரத்து: நாகர்கோயில்-பெங்களூர் எக்ஸ்பிரஸ்(17236) நாளை ரத்து

பெங்களூர்:விஜயவாடா டிவிஷனில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூர்-நாகர்கோயில் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தங்களது கட்டண பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு தினமும் மாலை 5 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 17235) இயக்கப்படுகிறது. ஒசூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக இந்த …

மேலும் படிக்க

வறுத்தெடுக்கிறது கோடை வெயில்: திருச்சியில் அதிகபட்சமாக 107 டிகிரி

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில்  அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருப்பதா மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். நேற்றைய வானிலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் வேலூரில் 105 பாரன்ஹீட்டும், சேலத்தில் 102 டிகிரி பாரன்ஹீட்டும், கோவையில் 100 டிகிரி பாரன்ஹீட்டும், சென்னையில் 99 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 95 …

மேலும் படிக்க

தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன:வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் 72.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967க்குப் பிறகு 46 ஆண்டுகால வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவாகும். 2009 தேர்தலில் 72.98 சதவீத வாக்குகள் பதிவாயின. அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி அதிக இடங்களைப் பிடித்தது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது. தற்போது 46 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது எந்த கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. …

மேலும் படிக்க

ராஜீவ் காந்தி கொலையாளிகள் வழக்கு: 5 பேர் அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை மாநில அரசு  விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க பரிந்துரைத்துள்ளது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் ரஞ்சன் …

மேலும் படிக்க