செய்திகள்

நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது சொந்த தொகுதியிலேயே விரட்டி அடிக்கப்பட்டார் – மு.க. ஸ்டாலின்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சகோதரி திருமதி பவித்ரவள்ளியை ஆதரித்து தாராபுரம் பொது கூட்டத்தில் பேசிய போது: அதிமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் எங்கும் சென்று பேச முடியவில்லை, ஒட்டு கேட்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதிமுக அளித்த வாக்குறுதிகள், உறுதிமொழிகள் என்ன ஆனது என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி …

மேலும் படிக்க

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திலும் சோதனை செய்ய தேர்தல் பறக்கும் படையினருக்கு உத்தரவு

போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் பணம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.இதனால் அனைத்து வாகனங்களையும் சோதனையிட ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை தொகுதியின் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், மாவட்டம் முழுவதும் போலீஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றன. பணம், பொருள் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இதையடுத்து போலீஸ் வாகனங்களையும் தேர்தல் …

மேலும் படிக்க

துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

15-04-2014 அன்று துணை வாக்காளர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி வாரியாக ஆண், பெண் வாக்காளர் விவரங்களும் வெளியிடப்படும் என்று கூறினார். மேலும் 19ம் தேதிக்குள் வாக்காளர் சீட்டு கிடைக்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

தவறாமல் வாக்களியுங்கள் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை அதனால் தவறாமல் வாக்களியுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். முக்கியமான பல கடமைகளில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. …

மேலும் படிக்க

ரஜினியை மட்டும் சந்தித்ததால் விஜயகாந்த் கோபம்? சமாதானம் செய்தாரா? நரேந்திர மோடி

ரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் வலுசேர்க்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். பின்னர் பேட்டியளித்த ரஜினிகாந்த், மோடியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் என்றார். நரேந்திர மோடி வலிமையான தலைவர், சிறந்த நிர்வாகி என்றும் கூறினார். இதற்கிடையே ரஜினியை சந்தித்த நரேந்திர மோடி, தமிழக பாஜ கூட்டணியில் அதிக வாக்கு …

மேலும் படிக்க

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆண், பெண் என குறிப்பிடப்படும் பாலினங்களைப் போல, திருநங்கைகள் நாட்டின் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என கூறி உச்சநீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. திருநங்கைகளுக்கும் சமத்துவம் அளிக்கும் வகையில் வழிவகை செய்யக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளித்துள்ளது. இது சம்பந்தமாக தேவையான சட்டதிருத்தங்களை ஏற்படுத்தக் கூறியுள்ள அந்த அமர்வு, …

மேலும் படிக்க

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாசகர்கள் அனைவருக்கும் ஜீனியஸ் டிவி மற்றும் ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மேலும் படிக்க

பாஜக வெளியிட்டது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை? ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக அப்படியே ஜெராக்ஸ் எடுத்து, அதில் சின்னத்தை மாற்றி, தங்கள் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, காங்கிரஸ் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தலுக்கான பல வேலைகளை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னர், நாங்கள் ஏழை மக்கள், விவசாயிகள், …

மேலும் படிக்க

கத்தி – தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் அல்லி ராஜா உடன் ஜெயசூர்யா

விஜய் நடித்து முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர், இனப் படுகொலையாளி ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதற்கான ஆதாரம் என்று இணையத்தில் உலவி வரும் ஃபோட்டோக்கள். ராஜபக்சேவின் மூலம் இலங்கையில் 2007-ல் 2ஜி உரிமம் பெற்றது, லைக்கா கம்பெனியின் லைக்காஃப்ளை-க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தின் ஏஜென்சி வாங்கியது என அடுத்தடுத்து, அல்லிராஜா பலாபலன்களைப் பெற்றுவருவதாகவும், லைக்கா நிறுவனத்தின் செயல் …

மேலும் படிக்க